பள்ளிகள் திறக்கப்படும் தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!

Trending

Breaking News
Loading...

பள்ளிகள் திறக்கப்படும் தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!

பள்ளிகள் திறக்கப்படும் தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!

 


ஆந்திர மாநிலத்தில் வைரஸ் தொற்றின் தினசரி புதிய பாதிப்புகள் ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றன. இருப்பினும் கடந்த மே 16ஆம் தேதி 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டதில் இருந்து தற்போது பாதிப்புகள் பெரிதும் குறைந்துள்ளன. நேற்று புதிதாக 3,166 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,019 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 21 பேர் பலியாகியுள்ளனர்.
 

முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் 

இந்நிலையில் கல்வி நிலையங்களை திறப்பது பற்றி மாநில அரசு தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இதுகுறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில கல்வித்துறை அமைச்சர் அடிமுலப்பூ சுரேஷ், கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளுக்கு வருமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

 மேலும் வாரத்தில் ஒருநாள் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை சந்திக்க மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. பாடப்புத்தகங்கள் தொடர்பான பயிற்சி வரும் 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

0 Response to "பள்ளிகள் திறக்கப்படும் தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel