அதிமுக ஆட்சி இறுதிக்கட்டத்தை
எட்டிய போது தேர்தல் நெருங்கும் சமயம் எடப்பாடி பழனிசாமி முக்கிய உத்தரவைப்
பிறப்பித்தார். தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் 2021
ஜனவரி 31ம் தேதி வரை விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள்
தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.
இதில் பல்வேறு முறைகேடுகள்
நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பல சங்கங்களில் கடந்த ஜனவரி 31க்கு
பிறகு வழங்கப்பட்ட நகைக் கடன்கள் முன்தேதியிட்டு பயிர்க்கடனாக மாற்றப்பட்டு
தள்ளுபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பயிர்க்கடன் வழங்காத காலங்களில் வழங்கப்பட்ட
பிற கடன்களையும் பயிர் கடன்களாக மாற்றியுள்ளனர். முதல்வரின் சொந்த மாவட்டமான
சேலத்தில்தான் அதிக கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலில் வேறு
மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரித்து ஜூலை 15ஆம்
தேதிக்குள் பயிர்க்கடன் தள்ளுபடி பட்டியலை 100
சதவீதம் மறுஆய்வு செய்ய கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கூட்டுறவு
சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், அனைத்து மண்டல இணை
பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "2021ஆம்
ஆண்டிற்கான பயிர்க்கடன் பயனாளிகள் பட்டியலை வெளி மாவட்ட அலுவலர்கள் குழு 100
சதவீதம் மறு கூராய்வு மேற்கொண்டு அந்த அறிக்கையை ஆய்வு மேற்கொள்ளும் சரக கூட்டுறவு
துணைபதிவாளரிடம் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
துணை பதிவாளர்கள் சரக வாரியாக
அறிக்கையின் அடிப்படையில் 5 சதவீதம் கடன்களையும், மத்திய
கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர்கள் 5 சதவீதம்
கடன்களையும் மேலாய்வு செய்ய வேண்டும். வெளிமாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர்களை
கொண்டு இந்த மேலாய்வு செய்ய வேண்டும். எந்த சங்கத்தில் மறு கூராய்வு முடியவுள்ளதோ, அந்த
சங்கத்தின் தள்ளுபடி பட்டியலை விரைந்து தணிக்கை மேற்கொள்ள ஏதுவாக தொடர்புடைய சரக
கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனருக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும்
0 Response to "கடன் தள்ளுபடி செய்ததில் ஊழலா? தீவிரமடையும் ஆய்வு! "
Post a Comment