தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்!

 தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்!

 

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதில் திட்டவட்டமாக உள்ளோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து:
 
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, நடைமுறையில் தான் உள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தது. அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் முக ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சமீபத்தில் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரிக்கை வைத்தார்.
 
மேலும் தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை முதல்வரிடம் அளித்தது. மேலும் மக்களிடையே நீட் தேர்வு பற்றிய கருத்துக்களை கேட்டறிந்தது. இந்த நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவு கேள்விக்குறியாக உள்ளது என பலரும் தெரிவித்து உள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
 

மாணவர்களுக்கு  நீட் தேர்வு பெரும் சவாலாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்து 12ம் வகுப்பு  மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும்நீட்  தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதில் நாங்கள் திட்டவட்டமாக உள்ளோம் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


0 Response to " தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதில் உறுதி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel