10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2020 - 2021க்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறையின் செயல்முறைகள்.


பள்ளி மாணவர்களுக்கு பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 23.08.2021 தேதி அன்று காலை 11.00 மணி முதல் 31.08.2021 தேதி வரை
பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு பிறந்த தேதி , தேர்வெண் ஆகியவற்றை அவர்தம் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி
படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அரசுத்
தேர்வுத் துறையின் மூலம் 21.08.2021 தேதி அன்று காலை 11.00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனவே , பள்ளி மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் , தங்களுக்கான Roll No , பிறந்த தேதி
ஆகிய விவரங்களை பதிவு செய்து , தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து
பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Response to "10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு 2020 - 2021க்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறையின் செயல்முறைகள். "
Post a Comment