கற்பவை கற்றபின்
தமிழ் வரிவடிவ
வளர்ச்சி
வினா 1.
கீழ்க்காணும்
பத்தியைப் படித்து, அதில்
இடம்பெற்றுள்ள பழைய வரிவடிவச் சொற்களை எடுத்து எழுதி, அவற்றை இன்றைய
வரிவடிவில் மாற்றி எழுதுக.
விடை:
(i) சுற்றுப்புறச்
சூழ்நிலைப் பிரச்சனைகள் பற்றிய இந்தியாவின் கவலை பல்லாண்டு காலமாக வளர்ந்தே
வருகிறது.
(ii) ‘மனிதன் ஏழ்மையிலே
இருக்கும்போது சத்தற்ற உணவினாலும், நோயினாலும் அச்சுறுத்தப்படுகிறான். பலவீனனாக இருப்பவன்
போருக்கு அஞ்கிறான். செல்வந்தனாக இருப்பவனோ தன் கொழுத்த செல்வத்தால் உண்டான
அசுத்தத்திற்கு அஞ்கிறான்’ என்றெல்லாம் திருமதி.
இந்திராகாந்தி அன்றைக்கு ஆற்றிய உரை நாம் நினைவு கூரத் தக்கது.
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
வினா1.
தமிழ் எழுத்துகள்
இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ……………………… காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
விடை:
இ) அச்சுக்கலை
வினா2.
வளைந்த கோடுகளால்
அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து …………………… என அழைக்கப் படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
விடை:
ஆ) வட்டெழுத்து
வினா3.
தமிழ் எழுத்துச்
சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் …………………….
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ. சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
விடை:
ஆ) தந்தை பெரியார்
கோடிட்ட இடத்தை
நிரப்புக.
1. கடைச்சங்க காலத்தில்
எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ………………………. என அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில்
புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ………………………
விடை:
1. கண்ணெழுத்துகள்
2. வீரமாமுனிவர்
குறுவினா
வினா1.
ஓவிய எழுத்து என்றால்
என்ன?
விடை:
தொடக்க காலத்தில்
எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்ததால் அதனை ஓவிய எழுத்து என்பர்.
வினா2.
ஒலி எழுத்து நிலை
என்றால் என்ன?
விடை:
ஓர் ஒலிக்கு ஓர்
எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
வினா3.
ஓலைச்சுவடிகளில்
நேர்க்கோடுகள், புள்ளிகள்
ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
விடை:
(i) புள்ளியிட்டு
எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்.
(ii) நேர்க்கோடிட்டு
எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும்.
ஆகிய காரணங்களால்
ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
வீரமாமுனிவர்
மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
விடை:
ஒகர வரிசை
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார்.
‘எ’ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ‘ஏ’ என்னும் எழுத்தை நெடிலாகவும் ‘ஒ’ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ‘ஓ’ என்னும் எழுத்தாக உருவாக்கினார்.
சிறு வினா.
வினா1.
எழுத்துச்
சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
விடை:
(i) ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும்
புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல்
எழுதினர்.
(ii) ஓலைச்சுவடிகளில்
நிறுத்தற் குறிகளும், பத்தி
பிரித்தலும் கிடையாது.
(iii) புள்ளி இடப்பட்டு
எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி
மெய்யா உயிர்மெய்யா, குறிலா
நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் துன்பம்
அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
வினா2.
தமிழ் எழுத்துகளில்
ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
விடை:
நெடிலைக் குறிக்க
ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (1) பயன்படுகின்றது.
ஐகார உயிர்மெய்யைக் குறிக்க
எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில்
இணைக்கொம்பு ()ை பயன்படுகின்றது.
ஔகார உயிர்மெய்யைக்
குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில்
கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.
குற்றியலுகர, குற்றியலிகர
எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.
நெடுவினா
வினா1.
எழுத்துகளின் தோற்றம்
குறித்து எழுதுக.
விடை:
(i) மனிதன் தனக்கு எதிரே
இல்லாதவர்களுக்கும், பின்னால்
வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.
(ii) அதற்காகப்
பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து
வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
(iii) தொடக்கக் காலத்தில்
எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ
குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து
என்பர்.
(iv) அடுத்ததாக ஒவ்வொரு
வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது.
அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று.
(v) இவ்வாறு ஓர் ஒலிக்கு
ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை’ என்பர். இன்று
உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.
சிந்தனை வினா.
வினா1.
தற்காலத்
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
விடை:
தமிழராய்ப் பிறந்தோர்
அனைவரும் தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.
தமிழ்மொழியில்
தோன்றிய இலக்கண, இலக்கியங்கள்
மற்றும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள்
போன்ற அனைத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் G அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.
பழைமையைப் பேணுவதுடன், புதுமை காணும்
நோக்கத்துடன் வெளிவரும் படைப்பிலக்கியங்களையும் அவற்றைப் படைப்போரையும் பேணும்
நிலை வர வேண்டும்.
பிறமொழி இலக்கியங்களை
மொழிபெயர்த்து தமிழிலேயே வெளியிட வேண்டும். கலைச்சொற்கள் புதிதாகப் படைக்கப்பட
வேண்டும்.
வினா2.
தமிழை உரோமன்
எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.
விடை:
அருள் : அம்மா இங்கே
வா’ என்பதை amma ingkee vaa என்று ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதுவது
மிகவும் தவறு.
செல்வி : நான்
எப்போதும் கைபேசியில் யாருக்காவது வாழ்த்து சொல்வதை vallthukal என்று தான் சொல்வேன்.
செல்வனி : மலாய்
மொழியில் எல்லாம் ஆங்கில எழுத்துருவில் தான் அனைவரும் எழுதுகிறார்கள். என் அத்தை
கூட இதனை அடிக்கடி கூறுவார்கள்.
ஆனந்தி : இணையத்தில், முகநூலில், கட்செவி அஞ்சலில்
எழுதும் போது சிறிதாக எழுதுவதற்கு ஆங்கில எழுத்துருவைப் பயன்படுத்துவதில் தவறில்லை
என்று நினைக்கிறேன்.
ஆரிப் : எப்படித்
தவறில்லை ? என்று
கூறலாம். உலகில் உள்ள அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் தமிழில் பெயரிட்டுள்ளனர்.
இன்று இணையத்தில் அதிகம் தேடப்படும், பயன்படுத்தப்படும் எட்டு மொழிகளில் ஒன்றாகத் தமிழ்
திகழ்ந்து வருகிறது. தமிழின் பெருமை கடல் கடந்தும் கோலோச்சி வருகிறது.
தமிழை நாம்
எழுதும்போது தமிழ் எழுத்துருவில் தான் எழுத வேண்டும். வாழ்த்துகள்’ என்றும் ‘அம்மா
இங்கே வா வா’ என்றும் தமிழில் எழுதுவதற்குப் பாமினி, இளங்கோ, ஸ்ரீலிபி, அமுதம், வானவில், அழகி போன்ற இணைய
தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!
0 Response to " 8 ஆம் வகுப்பு - இயல் 1 , உரைநடை உலகம் - தமிழ் வரிவடிவ வளர்ச்சி, வினா விடைகள்"
Post a Comment