தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.65 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இதற்கான அவகாசம் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்த உடன், ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டு பின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியலின் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடைபெறும் என்பதால், அதற்கான நடைமுறைகளில் திருத்தம் செய்து புதிய வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி கணிதம், இயற்பியல், Optional பாட மதிப்பெண்கள், 12-ம் வகுப்பு மொத்த மதிப்பெண்கள், 10-ம் வகுப்பு மதிப்பெண், பிறந்த தேதி, ரேண்டம் எண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுவுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக கணிதம், இயற்பியல் பாட மதிப்பெண்களுடன் வேதியியல் பாட மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
0 Response to "B.E., B.Tech., மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல்களை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது."
Post a Comment