
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் அரசு தொடர்ந்து
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்து வருகிறது. ஊரடங்கு தளர்வுகள் குறித்து
முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் தமிழகம்
முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மக்கள் வீட்டை விட்டு
அவசியமின்றி வெளியில் வரக் கூடாது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க வேண்டும்
போன்ற கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட்டது. பின்னர், ஒரு சில நாட்களில் கட்டுப்பாடுகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டது. இதன்
பாதிப்புகள் குறைந்துள்ள பகுதிகளில் முதற்கட்டமாக அரசு தளர்வுகளை
அறிவித்தது. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் மீண்டும்
கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 23ம் தேதியான நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிய இருந்தது. தமிழகத்தில்
பாதிப்புகள் குறைந்துள்ள போதிலும், தினசரி 1700 க்கும் மேற்பட்டோர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நேற்று முதல் செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதல்வர் நேற்று அறிவித்துள்ளார்.
நேற்றைய அறிவிப்பில், பல மாதங்கள் கழித்து திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்கள் மீண்டும் திறக்க
அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் குறித்து முதல்வர், கொரோனா கட்டுப்பட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் இந்த தளர்வுகள்
அமலுக்கு வரும். வணிக வளாகங்களில் மக்கள் அதிக கூட்டம் சேரக் கூடாது. மக்களை
முகக்கவசம் அணிவது, கை சுத்திகரிப்பானை
பயன்படுத்துவது, தகுந்த சமூக
இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க
வேண்டும் என்றும், கல்வி மற்றும்
பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே தளர்வுகள்
அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
0 Response to "தமிழக மக்கள் கவனத்திற்கு – முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தல்!"
Post a Comment