கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலைவாய்ப்பினை இழந்த தொழிலாளர்களுக்கு
அதிகபட்சமாக 2022ம் ஆண்டு வரை
வருங்கால வைப்பு நிதியினை மத்திய அரசு செலுத்தும் என்று மத்திய நிதியமைச்சர்
அறிவித்துள்ளார்.
வருங்கால வைப்பு நிதி:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து அவர்களின் எதிர்காலத்திற்காக ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சேமிக்கிறது. இதன் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மத்திய அரசு செலுத்தும். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா ஊரடங்கு முறை அமலில் உள்ளதால் தொழிலதிபர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை புதுப்பிக்கவும், பாதிக்கப்பட்ட துறைகளுக்கு நிவாரணம் வழங்கவும், தொற்றினால் இழந்த வேலைவாய்ப்பை மீட்டெடுத்து, புதிய வாய்ப்பை உருவாக்கி ஊக்கப்படுத்தவும், மத்திய அரசு ‘சுய சார்பு இந்திய வேலை வாய்ப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவிடத்தது. அதன்படி, 1000 தொழிலாளர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்களாக இருந்தால் தகுதி வாய்ந்த தொழிலாளர்களின் (யுஏஎன்) எண்ணுக்கு 24 மாதங்களுக்கான தொழிலாளர் மற்றும் தொழிலதிபரின் பி.எப்., பங்களிப்பு தொகையை மத்திய அரசு செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பி.எப்.,பில் பதிவு செய்த நிறுவனங்களில் கொரோனா காரணமாக பணி இழந்தவர்களுக்கு
பி.எப். தொகை பங்களிப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு இரண்டையும்
மத்திய அரசு அதிகபட்சமாக 2022ம் ஆண்டு வரை செலுத்தும் என்று அறிவித்துள்ளார். இவர்கள் மத்திய அரசின் 16 வகையான தொழில் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பினை பெறலாம் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை வழங்கும்
நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அதற்கான தொகை கொரோனா காலத்தில் ஒரு லட்சம்
கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது என்று கூறியுள்ளார்.
0 Response to "தொழிலாளர்களின் PF தொகையை மத்திய அரசே செலுத்தும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! "
Post a Comment