
இந்தியாவில் பட்டப்படிப்பு சான்றிதழ்களின் உண்மைத்
தன்மையை பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
பட்டப்படிப்பு சான்றிதழ்:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள்
வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்
சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் மாணவர்கள்
கூட்டம் கூடுவதை தவிர்க்க பெரும்பாலும் ஆன்லைன் மூலம் சேர்க்கை பணிகள் நடைபெற்று
வருகிறது.
இந்த நிலையில் மாணவர்கள் இணையதளங்களில் கல்லூரிகளை
தேர்ந்தெடுத்து விரும்பிய பாடப் பிரிவில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். இந்த
விண்ணப்ப பதிவின் போது சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்கின்றனர். இந்த
நிலையில் மாணவர்கள் உண்மை சான்றிதழ்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். மேலும்
சான்றிதழ்களின் உண்மைத்தன்மை ஆராயப்படும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பட்டப்படிப்பு சான்றிதழ்களின் உண்மைத்
தன்மையை பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக யுஜிசி செயலாளர் ரஜனிஷ் ஜெயின் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு
சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் பட்ட படிப்பு சான்றிதழ்களை மேற்கொள்ளும் பணியை
யுசிஜி மேற்கொள்வதில்லை. அதனால் பல்கலைக்கழகங்கள் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை
ஆராய வேண்டும். இது குறித்து எழும் புகார்களை பல்கலைக்கழகங்களே நிவர்த்தி செய்ய
வேண்டும் என்று யுஜிசியின் செயலாளர் ரஜனிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
0 Response to "நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கவனத்திற்கு – யுஜிசி அறிவுறுத்தல்!"
Post a Comment