
இந்தியாவின்
முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தயாரித்துள்ள மலிவு விலையிலான
ஸ்மார்ட் போன்கள் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜியோ
போன்
இந்தியாவில்
அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அனைத்து வகையான
பயன்பாட்டாளர்களுக்கும் உரிய ஒரு மலிவு விலை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய
இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி ஜியோ போன் நெக்ஸ்ட் என்று
அழைக்கப்படக் கூடிய புதிய வகை ஸ்மார்ட் போன்களை, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனம்
இணைந்து தயாரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இம்மாதம் 10 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக
சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.
ஜியோ போன் நெக்ஸ்ட், ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனை செய்யப்படும்
போன்களில் மிகவும் மலிவானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இதன் விற்பனை ஒரு விரிவான அமைப்பின் கீழ்
செய்யப்பட உள்ளது. இதனுடன் ரிலையன்ஸ் ஜியோ, பல இந்திய வங்கிகள் மற்றும் கடன் வழங்கும்
கூட்டாளர்களுடன் சேர்ந்து பல்வேறு கட்டண முறைகளின் மூலம் ஜியோ போன் நெக்ஸ்ட் மாடலை
விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம்,
SBI, HDFC, IDFC First Assure, மற்றும் DMI நிதி நிறுவனத்துடன் ஒத்துழைக்க வாய்ப்புள்ளதாக
தெரிகிறது.
அந்த வகையில்
அடுத்த 6
மாதங்களில் 50 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்வதன்
மூலம் ஜியோ அதன் வணிகத்தை ரூ.10,000 கோடி உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது தவிர
ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலின் ஆரம்ப விலைகளை பொருத்தளவு, ரூ .5,000 ஆக இருக்கலாம் எனவும் ஜியோபோன் நெக்ஸ்ட்
அட்வான்ஸ் மாடல்களின் ஆரம்ப விலை ரூ.7,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக
கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களை மொத்த தொகையை செலுத்தியும் அல்லது
மொத்தவிலையில் 10 சதவிகிதத்தை மட்டுமே செலுத்தியும் பெற்றுக் கொள்ள முடியும்.
0 Response to "செப்.10 முதல் விற்பனைக்கு வரும் Jio Phone Next? விலை உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!"
Post a Comment