தமிழகத்தில் கொரோனா
இரண்டாம் அலை தாக்கம் கணிசமாக குறைந்திருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடப்பு கல்வியாண்டிற்கு 2,423 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய
தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
அரசு
அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா
வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்நிலைமையை சரி செய்ய அரசு
ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. அதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக
வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டது. இந்நிலையில் அரசின் துரித நடவடிக்கை காரணமாக
கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அதனால் பல்வேறு தளர்வுகள்
வழங்கப்பட்டுள்ளன.
அதன் படி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில்
வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்.4 முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளது.
மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி
செலுத்தி இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு கல்லூரிகளில்
காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கல்வி இயக்குனர்
கடிதம் மூலம் அரசிடம் கோரிக்கை வைத்தார்.
இது இப்படி நியமனம் செய்யபடுவாங்க...
ReplyDelete