9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - புறநானூறு - வினா விடைகள்

Trending

Breaking News
Loading...

9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - புறநானூறு - வினா விடைகள்

9 ஆம் வகுப்பு - தமிழ் -  இயல்  2 -  புறநானூறு  - வினா விடைகள்


நீர் நிலைகளைப் போற்றுவோம்….

நிலம், நீர், காற்று என்பவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும்.எனவே இயற்கை நமக்குக் கொடையாகத் தந்திருக்கும் நிலம், நீர், காற்று போன்றவற்றை உரிய முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும். பண்டைக் காலத்தில் நம் முன்னோர்கள் நீரின் இன்றியமையாமையை உணர்ந்திருந்தனர். நீர்நிலைகளை உருவாக்குபவர்களை “உயிரை உருவாக்குபவர்கள்” என்கிறது இந்தப் புறநானூற்றுப் பாடல்.

புறநானூறு

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு. இது பண்டைய மன்னர்களின் வீரம் , வெற்றி , கொடை குறித்தும், குறுநில மன்னர்கள் , புலவர்கள் , சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் ,அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது. இந்நூல் பண்டையத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது.

 

பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பதினெண்மேல்கணக்கு நூல்களாகும்.

வான் உட்கும் வடிநீண் மதில்,

மல்லல் மூதூர் வய வேந்தே!

செல்லும் உலகத்துச் செல்வம் வெண்டினும்

ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,

ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த

நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்று

அதன் தகுதி கேள் இனி மிகுதி ஆள!

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

 

உண்டி முதற்றே உணவின் பிண்டம் ;

உணவுஎனப் படுவது நிலத்தோடு நீரே

நீரும் நிலமும் புணரியோர் , ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே!

வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்

வைப்பிற்று ஆயினும் , நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே ! அதனால்

அடுபோர்ச் செழிய ! இகழாது வல்லை ;

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம ! இவண் தட்டோரே !

தள்ளாதோர் இவண் தள்ளா தோரே !

 

 

 

 

 

 

 

 

உணவால் ஆனது உடல்

நீரால் ஆனது உணவு

உணவு என்பது நிலமும் நீரும்

நீரையும் நிலத்தையும் இணைத்தவர்

உடலையும் உயிரையும் படைத்தவர்

புஞ்சை நிலத்தின் நெஞ்சம் குளிர

வான் இரங்கவில்லையேல் யார் ஆண்டு என்ன

அதனால் எனது சொல் இகழாது

நீர்வளம் பெருக்கி நிலவளம் விரிக்கப்

பெற்றோர் நீடுபுகழ் இன்பம் பெற்றோர்

நீணிலத்தில் மற்றவர் இருந்தும் இறந்தும்

கெட்டோர் மண்ணுக்கு பாரமாய்க் கெட்டோர்

-பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாடியது


திணை :- பொதுவியல், துறை  - பொருண்மொழிக்காஞ்சித் துறை

 குறிப்புரை

 உலகில் உள்ள யாவற்றையும் மிகுதியாகக் கொண்டு விளங்கும் பாண்டிய் நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் குவித்தவர். நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த புன்செய் நிலமாயினும் , அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது. அதனால் நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக.         நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலை பெருகச் செய்தல் வேண்டும்.

அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் , நிலைத்த புகழையும் பெறுவர். இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர்.

பொதுவியல் திணை

                        வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம்  பொதுவான செய்திகளும் , முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.

பொருண்மொழிக்காஞ்சித்துறை

சான்றோர் தெளிவாய் ஆராய்ந்து தெளிந்த பொருள்களைப் பிறர்க்குப் பயன்படுமாறு எடுத்துரைப்பது பொருண்மொழிக் காஞ்சித்துறையாகும்.

 

இலக்கணக்குறிப்பு

மூதூர் , நல்லிசை , புன்புலம் – பண்புத்தொகைகள் ,

நிறுத்தல் – தொழிற்பெயர்,அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், நீரும் நிலமும் , உடம்பும் உயிரும் – எண்ணும்மைகள் ,

அடுபோர் – வினைத்தொகை.

Rectangle: Rounded Corners: எட்டுத்தொகை நூல்கள்
1.	நற்றிணை
2.	குறுந்தொகை
3.	ஐங்குறுநூறு
4.	பதிற்றுப்பத்து
5.	பரிபாடல்லித்தொகை
6.	அகநானூறு
7.	புறநானூறு
பகுபத உறுப்பிலக்கணம்

நிறுத்தல் – நிறு + த் + த் + அல்

நிறு – பகுதி ,

த் – சந்தி ,

த் – இறந்தகால இடைநிலை ,

அல் – தொழிற்பெயர் விகுதி.

கொடுத்தோர் – கொடு +த் + த் +  ஓர்

கொடு – பகுதி , த் – சந்தி ,

த் – இறந்தகால இடைநிலை ,

ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

 

கற்பவை கற்றபின்

 

Question 1.

பின்வரும் புறநானூற்றுத் தொடர்களுக்கான பொருளைப் பள்ளி நூலகத்திற்குச் சென்று அறிந்து எழுதுக. அ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (புறம் – 18)

Answer:

பாடியவர் : குடபுலவியனார்

பாடப்பட்ட அரசன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

திணை : பொதுவியல்

துறை : முதுமொழிக்காஞ்சி

பொருள் : உணவைக் கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவர் ஆவர்.

 

ஆ) உண்பது நாழி, உடுப்பது இரண்டே ! (புறம் – 189)

Answer:

பாடியவர் : மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக்காஞ்சி

பொருள் : உண்ணப்படும்பொருள்நாழி(உழக்கு) அளவாகும். உடுக்கப்படும் உடை மேலே ஒன்றும் இடையிலே ஒன்றுமாக இரண்டேயாகும்.

 

இ) யாதும் ஊரே யாவரும் கேளிர்! (புறம் – 192)

Answer:

பாடியவர் – கனியன் பூங்குன்றனார்

திணை – பொதுவியல்

துறை : பொருண்மொழிக் காஞ்சி

பொருள் – எங்களுக்கு எல்லாஊர்களும் எம்ஊர்களாகும்.எல்லாரும்உறவினர்களே ஆவர்.

 

ஈ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! (புறம் – 312)

Answer:

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

பாடியவர் : பொன் முடியார்

திணை : வாகை

துறை : மூதின் முல்லை

பொருள் : பெற்ற வளர்த்த மகனை நற்பண்புகள் நிறைந்தவனாக ஆக்குவது தந்தையின் கடமை. நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது நாடாளும் வேந்தனின் கடமை

 

உ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், (புறம் – 183)

Answer:

பிற்றைநிலை : முனியாது கற்றல் நன்றே!

பாடியவர் : பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

திணை : பொதுவியல்

துறை : பொருண்மொழிக் காஞ்சி

பொருள் : ஒருவன் தன் ஆசிரியர்க்குத் துன்பம் நேர்ந்த விடத்து அவர்க்கு உதவி செய்தும், மிக்க பொருளைத் தந்தும் அவர்க்கு வழிபாடு செய்யும் தன்மையை வெறுக்காமலும் கற்பது நலம்.

 

Question 2.

உணவாகும் மழை” என்னும் தலைப்பில் விளக்கக் குறிப்புகளுடன் கூடிய படத்தொகுப்பை உருவாக்குக.

 

பாடநூல் வினாக்கள்

 

பலவுள் தெரிக

 

Question 1.

மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை

ஆ) பூவரசுமரம்

இ) வளம்

ஈ) பெரிய

Answer:

இ) வளம்

 

குறுவினா

 

Question 1.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்பு தருக.

Answer:

நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். இதைக்குடபுலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடும் புறநானூற்றுப் பாடலில் இதைத் தெரிவிக்கிறார்.

 

சிறுவினா

 

Question 1.

நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

Answer:

நிலம் குழியான இடங்கள் தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும். அவ்வாறு நிலத்துடன் நீரைச் சேர்த்துப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

 

கூடுதல் வினாக்கள்

 

பலவுள் தெரிக

 

Question 1.

பொருந்தாததைத் தேர்ந்தெடு.

அ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே

ஆ) உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

இ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

ஈ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

Answer:

ஈ) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

 

Question 2.

பொருத்துக.

அ) யாக்கை – i) பழைமை

ஆ) தாட்கு – ii) உடம்பு

இ) வளமை – iii) முயற்சி

Answer:

அ) ii ஆ) iii இ)

 

 

Question 3.

பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக் கருவூலம் …………..

அ) நற்றிணை

ஆ) ஐங்குறுநூறு

இ) கலித்தொகை

ஈ) புறநானூறு

Answer:

ஈ) புறநானூறு

 

நிரப்புக

 

4. நீர் இன்றி அமையாதது …………

Answer:

உடல்

 

5. உணவு எனப்படுவது நிலத்துடன் ………… ஆகும்.

விடை:

நீரும்

 

6. உணவைத் தந்தவர் ……….. தந்தவர் ஆவர்.

Answer:

உயிர்

 

 

7. பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகளடங்கிய பண்பாட்டு கருவூலமாகத் திகழும் நூல் …………

Answer:

புறநானூறு

 

8. தாட்கு என்ற சொல்லின் பொருள்

Answer:

முயற்சி

 

குறுவினா

 

Question 1.

புறநானூறு’ குறிப்புத் தருக.

Answer:

 

எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று.

பண்டைய வேந்தர்களின் வெற்றி, வீரம், கொடை, குறித்தும் குறுநில

மன்னர்கள், புலவர்கள், சான்றோர்கள் பெருமைகளைக் கூறும் நூல்.

பண்டைய கால மக்களின் புறவாழ்க்கையைப் பற்றிக் கூறும் நூல்.

பண்டைய தமிழரின் வரலாற்றுப் பண்பாட்டுக் கருவூலம் .

மன்னர்கள், பெண்பாற் புலவர்கள் போன்றவர்களாலும் பாடப்பெற்றது.

Question 2.

பொதுவியல் திணை’ – விளக்குக.

Answer:

வெட்சி முதலான புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.

 

Question 3.

முதுமொழிக் காஞ்சித் துறையை விளக்குக.

Answer:

அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல் முதுமொழிக் காஞ்சித் துறையாகும்.

 

Question 4.

மூவகை இன்பங்களாக குடபுலவியனார் கூறுவன யாவை?

Answer:

 

இம்மைக்கு மட்டு மின்றி மறுமை இன்பம்

உலகையே வெல்லும் ஒரு தனி ஆட்சி

வாடாத புகழ்மாலை இவையே மூவகை இன்பங்கள் ஆகும்.

பாடலின் பொருள் :

 

விண்ணை முட்டும் திண்ணென்ற உறுதியுடைய உயர்ந்த மதிலைக் கொண்ட வளம் பொருந்திய பழமையான ஊரின் தலைவனே! வலிமை மிக கொண்ட வேந்தனே! நீ இம்மையில் மட்டுமல்ல, மறுமை இன்பத்தை அடையவும், உலகம் வெல்லும் விருப்பம் நிறைவேறவும், நிலையான புகழைப் பெறவும் ஆகிய மூவகை இன்பங்களையும் பெறவிரும்பினால், என்னவெல்லாம் நீ செயலாற்ற வேண்டும் என கூறுகிறேன் கேட்பாயாக.

 

உலகில் உள்ள அனைத்து ஆற்றல், செல்வம், நல்லாட்சி, புகழ் என யாவற்றையும் மிகுதியாகக் கொண்டு விளங்கும் பாண்டியன் நெடுஞ்செழியனே! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது ஆகும். உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்.

 

உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும். நிலத்தையும், நீரையும் ஒன்று சேர்த்தவர். இவ்வுலகில் உடலையும், உயிரையும் ஒன்று சேர்த்தவர் ஆவார்.

 

நெல் முதலிய தானியங்களை விதைத்து விட்டு, அத்தானியங்களை விளையச் செய்ய வான் இறங்கி மழை தரவில்லையென்றால் அந்நில உலகை ஆளும் அரசனின் முயற்சியும், செயலும் சிறிதும் உதவாது. யார் ஆண்டாலும் பேரும், புகழும், மக்கள் இன்பமும் பெறல் ஆகாது. அதனால் நான் கூறும் மொழிகளை இகழாது கடைபிடிப்பாயாக. நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர் நிலைகளைப் பெருகச் செய்வாயாக. அவ்வாறு நிலத்துடன் நீரை நீ கூட்டினால்,

 

மறுமை இன்பத்தை அடைதல்.

உலகு முழுவதையும் வென்று தனி ஆட்சி அமைத்தல்.

வாடாத நிலையான புகழ் மாலை பெறுதல்.

ஆகிய மூவகை இன்பங்களையும் பெற்று இவ்வையத்தில் வாழ்வாங்கு வாழலாம் என்ற தத்துவத்தை பாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் குடபுலவியனார் கூறுகிறார்.

 

சொல்லும் – பொருளும் :

 

யாக்கை – உடம்பு

புணரியோர் – தந்தவர்

புன்புலம் – புல்லியநிலம்

தாட்கு – தாள் – முயற்சி ஆளுமை

(தாள் ஆற்றித் தந்த பொருள், குறள் ஒப்புநோக்கு)

 

தள்ளாதோர் இவண் தள்ளா தோரே’ தள்ளாதோர் – குறைவில்லாது நீர்நிலை அமைப்பவர்கள் குறைவில்லாத புகழுடையவர்களாக விளங்குவார்கள்

 

இலக்கணக் குறிப்பு :

 

மூதூர், நல்லிசை, புன்புலம் – பண்புத்தொகைகள்

நிறுத்தல் – தொழிற்பெயர்

அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

நீரும் நிலமும், உடம்பும் உயிரும் – எண்ணும்மைகள்

அடுபோர் – வினைத்தொகை

கொடுத்தோர் – வினையாலணையும் பெயர்

 

பகுபத உறுப்பிலக்கணம் அறிக :

 

1. நிறுத்தல் = நிறு + த் + தல்

நிறு – பகுதி

த் – இறந்தகால இடைநிலை

தல் – தொழிற்பெயர் விகுதி

 

2. கொடுத்தோர் = கொடு + த் + த் + ஓர்

கொடு – பகுதி

த் – சந்தி

த் – இறந்தகால இடைநிலை

ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி

0 Response to "9 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 2 - புறநானூறு - வினா விடைகள் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel