" எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே "
தம்முயிர்போல் எவ்வுயிரையும் நேசிக்கும் உயர்குணம் உடையவர்களே உண்மையான உயர்திணை. மற்றவர்களை எல்லாம் அஃறிணைக்குள் அடக்கிவிடலாம்.
"எல்லோரும் வாழ வேண்டும்., எல்லோர்க்காவும் நான்
வாழ வேண்டும் " என்று எண்ணுகிற உயர்ந்த உள்ளம் கொண்டவர்களே உண்மையான
உயர்திணை.
நான் நன்றாக வாழவில்லை என்றாலும் பரவாயில்லை. மற்றவர்கள்
மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே போதும் என்று சிந்திப்பதே தமிழ்ச் சமுதாயம் கண்ட உயர் சிந்தனை. அந்தச் சிந்தனையில் உச்சம் தொட்ட பாடல் ஒன்றை
இங்குக் காண்போம்.
"தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!
அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே!
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!
( தாயுமானவர் பாடல்கள்)
2. அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை
ஆக்கிவிட்டால் போதும். இன்ப நிலை தானே வந்து சேரும்.
3. எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத் தவிர , வேறு எதையும் நினைக்க மாட்டேன்
" என்று வேண்டுகிறார் தாயுமானவர்.
எல்லா
உயிர்களையும் தாயுள்ளத்தோடு
நேசித்ததால்தான், உலக உயிர்களுக்கு
எல்லாம் அவர் தாயும் ஆனவர் ஆக. இருந்து
" தாயுமானவர் " என்று பெயர் பெற்றார் போலும்.
தாயுமானவர் போல்,
நாமும் எல்லா உயிர்களின் மீதும் அன்பு செலுத்துவோம். உலக உயிர்களுக்கு எல்லாம் தாயும் ஆனவராய் நாம்
இருப்போம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 133. எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே ஆ.தி.பகலன்"
Post a Comment