திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கம், அரசு மேல்நிலைப்பள்ளியில்
, இன்று 15.8.2024 சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்விற்கு வரவேற்புரையைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி அனிதா அவர்கள்
மிகச்சிறந்த முறையில் வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு
பார்த்தசாரதி அவர்கள் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக
செயலாளர் திரு பரந்தாமன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள்
மாணவர்களுக்குத் தேவையான உரிய ஆலோசனைகளையும் கல்வி சம்பந்தமான கருத்துக்களையும்
பகிர்ந்து கொண்டார்கள். இவர்களுடன் ராமன், வாசு, ராமதாஸ் போன்றோர்களும் கலந்து
கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் சுதந்திர தின
விழா குறித்தான உரைகளும் என மாணவர்கள் தங்கள் விழா உணர்வை
ஏற்படுத்தினார்கள். நிகழ்வின் இறுதியில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திருமதி
சிவகாமசுந்தரி அவர்கள் தனக்கே உரிய பாணியில் மிகச்சிறப்பாக நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வை தமிழ் ஆசிரியர் வெ. பாலமுருகன் தொகுத்து வழங்கினார். இறுதியில்
நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது..
இவ்விழாவிற்கான புகைப்படங்களை பட்டதாரி ஆசிரியர்கள் ஆலன்
கிளாடின் மற்றும் பாரதிராஜா ஆகிய இருவர்களும் எடுத்தனர். உடற்கல்வி ஆசிரியர்
திருமதி கலைமகள் அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்தினார்.
.jpg)
0 Response to "15.8.2024 அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா🙏"
Post a Comment