
"நீறு இல்லா நெற்றி பாழ் "
"நெற்றியில் தவறாமல் திருநீறு பூச வேண்டும். இல்லையேல் நெற்றி பாழாகும்" என்று தான் இயற்றிய நல்வழி என்னும் நூலில் பாடியுள்ளார் ஔவையார். இந்த உலகம் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று நினைத்து அவர் கூறினார். ஆனால், தற்போது தமிழ்நாட்டு மக்கள் எந்த வழியில் செல்கிறோம் என்று தெரியாமல் சென்று கொண்டிருக்கிறார்கள்.
பள்ளிகளில் ஏற்படும் சாதிய மோதல்களைத் தவிர்க்க ஒரு குழு
அமைத்தார்கள். அதில் பல ஆலோசனைகள் அரசுக்கு வழங்கப்பட்டன . அதில் ஒன்று, "நெற்றியில் திலகம் ( பொட்டு) வைப்பதைத் தவிர்க்க வேண்டும் " என்பதாகும்.
நம் தமிழ்நாடு இருப்பது புவிநடுக்கோட்டிற்கு அருகில் உள்ள வெப்ப மண்டலப் பகுதியாகும். இங்கு வாழும் மக்கள் வெப்பத்தினால் பாதிக்கப்படுவார்கள் . அதை தவிர்க்கவே , நெற்றியில் திருநீறு, குங்குமம், சந்தனம் ஆகியவற்றைப் பூசி உடலை குளிர்வித்தனர் .இது அறிவியல் .
திருநீறு மதத்தின் அடையாளம் அல்ல!
தமிழ் மருத்துவத்தின் அடையாளம்!
நம் வரலாறு தெரியாதவர்கள் எல்லாம் நமக்கு வகுப்பு எடுக்கிறார்கள் . எல்லாம் காலக்கொடுமை.
நெற்றியில் திருநீறு பூசக்கூடாது என்ற
நெருக்கடிக்கு தமிழர்கள்
தள்ளப்படுவது தமிழ்நாட்டில் இது முதல்
முறையன்று. "களப்பிரர்கள் "
காலத்தில் நெற்றியில் திருநீறு பூசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது அதை
தமிழர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் தெரியுமா?
உடல் முழுவதும் திருநீறு பூசினார்கள். நெற்றியில் தானே திருநீறு பூசக்கூடாது என்று
சொன்னீர்கள். உடல் முழுவதும் பூசக்கூடாது என்று சொல்லவில்லையே? என்று தங்கள்
எதிர்ப்பைத் தெரிவித்து ஆளும் அரசையே அதிர வைத்தார்கள் . உடல் முழுவதும் தீருநீறு பூசியிருந்த
ஆண்டிகளையே ( இறையடியார்) "திருநீறு
பூச்சு ஆண்டி " என்றனர். அதுவே மருவி
"பூச்சாண்டி " என்றானது. உடல் முழுவதும் திருநீறு பூசியிருக்கும்
பூச்சாண்டிகளின் உருவம் குழந்தைகளுக்கு அச்சத்தை உண்டாக்கியது. பின்னாளில்
குழந்தைகளைப் பயமுறுத்த " பூச்சாண்டி வரான் " என்ற சொல்லாடலைப்
பயன்படுத்தினர்.
.இதுதான் பூச்சாண்டி உருவான வரலாறு.
வாரியார் சுவாமிகள் தன் உடலில் பல்வேறு இடங்களில் திருநீறு பூசக் கூடியவர். ஒருமுறை அவர் தொடர் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு எதிரே அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்கள் சிலர் இவரைப் பார்த்து " சுவாமி ஏன் உடல் முழுவதும் சுண்ணாம்பு அடித்திருக்கிறார்? என்று கிண்டலடித்தனர். நன்கு கட்டப்பட்ட வீட்டிற்குத்தான் சுண்ணாம்பு அடிப்பார்கள். உங்களைப் போன்ற குட்டிச்சுவருக்கு எல்லாம் சுண்ணாம்பு அடிக்க மாட்டார்கள் . சுவரில் எந்தவொரு பூச்சியும், நுண்ணுயிரும் நுழையாமல் இருக்கவே சுண்ணாம்பு அடிக்கிறார்கள். என் உடல் என்னும் சுவர் நீண்டநாள் நன்றாக இருக்கவே நான் சுண்ணாம்பு அடித்திருக்கிறேன் " என்றார் வாரியார் சுவாமிகள். திருநீற்றுக்கு எதிர்ப்பு வரும் போதெல்லாம் பதிலடியை பலமாகவே கொடுத்திருக்கிறார்கள் தமிழர்கள்.
"காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு "
என்ற திருநீற்றுப் பதிகத்தைப் பாடி கூன் பாண்டியனின் உடலில் திருநீறு பூசினார் திருஞான சம்பந்தர். அதனால் அவர் உடலில் இருந்த வெப்பு நோய் நீங்கியது. அவர் கூனும் நிமிர்ந்தது. கூன்பாண்டியன் தன் கூன் நிமிர்ந்தபின் சுந்தர பாண்டியன் ஆனான். குணப்படுத்தவே முடியாத நோயான சூலை நோயால் துன்பப்பட்டார் அப்பரடிகள். அவரையும் குணப்படுத்தியது திருநீறுதான் .
நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணமாக்க வல்லது திருநீறு. சித்தர்கள் இந்த உலகிற்குக் கொடுத்த நன்கொடைதான் " திருநீறு " . என்றாவது ஒருநாள் இந்தத் திருநீற்றுச் சாம்பலைப் போலவே உன் உடலும் சாம்பலாகும் என்ற தத்துவத்தை நாள்தோறும் நமக்கு நினைவுப்படுத்துவது திருநீறுதான். . அதற்காகவே, , நம்மை திருநீறு பூசச் சொன்னார்கள் சித்தர்கள்.
திருநீறு பூசுவதால் தலையில் உள்ள நீர் உறிஞ்சப்படும். சளி உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம். மனித உடலில் நெற்றியே முதன்மை பாகமாகும் அதன் வழியாக அதிக ஆற்றலை வெளிப்படுத்தவும் உள்ளிழுக்கவும் . முடியும். இது ஒரு வர்மப் புள்ளி ஆகும். மற்றவர்கள் பார்வையால் நம்மைக் கட்டுப் படுத்தும் ஆற்றலைத் ( நோக்கு வர்மம்) தடுக்கவே நெற்றியில் திருநீறு, பொட்டு வைத்து அந்த இடத்தை மறைக்கிறார்கள். இதுதான் தமிழர்களின் அறிவியல் சிந்தனை.
" நீறுஇன்று அமையாது தமிழர்கள் நெற்றி!
எத்தனை சட்டங்கள் போட்டாலும்
இறுதியில் தமிழர்களுக்கே வெற்றி!
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to " தமிழ் அறிவோம்! 156 நீறு இல்லா நெற்றி பாழ் ஆ.தி.பகலன்"
Post a Comment