தேவைதானா?
வார்த்தைக் கோலங்கள்
கோடிட்ட பாலவிரிசலில்
பதுங்கிய மாவீரக் கோழைத்தனம்
விடிந்து விட்ட ராகங்களில்
பாய்ந்தோடும் ரணம்
பசியின்றி பரிதவித்து
பாதைகள் அமைத்து
பரிகாரப் பறவைகள்
பயந்து வெடித்த மனத்தூரலில்
இலைகளினூடே இம்சை
தோண்டிய அருவிக் கண்களோடு
துழாவும் மனத்துயரங்கள்
எதற்காக இம்சைப்பயணம்
இருண்டாவிட்டது உலகம்
விடிந்து விடுமுன்னே
வியப்புக் குறியாய் நீ
சுவாசிக்க கரியமில வாயுவோடு
ஹைட்ரஜன்,ஹீலியம்
விதைக்கும்
உலகமயம் தேவைதானா
கடைகோடி மனிதருள்
உன்னுள் ஒருவனாய்
கோடிட்ட பாலவிரிசலில்
பதுங்கிய மாவீரக் கோழைத்தனம்
விடிந்து விட்ட ராகங்களில்
பாய்ந்தோடும் ரணம்
பசியின்றி பரிதவித்து
பாதைகள் அமைத்து
பரிகாரப் பறவைகள்
பயந்து வெடித்த மனத்தூரலில்
இலைகளினூடே இம்சை
தோண்டிய அருவிக் கண்களோடு
துழாவும் மனத்துயரங்கள்
எதற்காக இம்சைப்பயணம்
இருண்டாவிட்டது உலகம்
விடிந்து விடுமுன்னே
வியப்புக் குறியாய் நீ
சுவாசிக்க கரியமில வாயுவோடு
ஹைட்ரஜன்,ஹீலியம்
விதைக்கும்
உலகமயம் தேவைதானா
கடைகோடி மனிதருள்
உன்னுள் ஒருவனாய்
மயிலம் இளமுருகு
0 Response to "தேவைதானா"
Post a Comment