நாங்களும் மனிதர்களே
__________________________
__________________________
இருக்க வீடின்றி
ஆகாயமே வீடாய்
உணர்வுகளைக்கூட
ஊமத்தம் பட்டாசாய்
யாரும் காணாமல்
சிலவற்றை கழிக்க
விடியற்காலை அவஸ்தைகள்
பகலில் யாரும் வரலாம்
இரவில் அப்படி விட்டால்
தங்க இடமில்லாமல்
தவிக்கும் நாங்களும்
இப்புவியின் மனிதர்களே
எங்களுக்கான வாழ்க்கையை
சிலர் வாழ்ந்துவிட்டு
ஏளனம் செய்யும் சமூகமே
பொதுவுடைமை என்பதின்
சொல்லுக்கு பொதுப்புத்தியில்
உரைப்பதென்ன எல்லாம்....?
எங்களுக்கு....
ஆகாயமே வீடாய்
உணர்வுகளைக்கூட
ஊமத்தம் பட்டாசாய்
யாரும் காணாமல்
சிலவற்றை கழிக்க
விடியற்காலை அவஸ்தைகள்
பகலில் யாரும் வரலாம்
இரவில் அப்படி விட்டால்
தங்க இடமில்லாமல்
தவிக்கும் நாங்களும்
இப்புவியின் மனிதர்களே
எங்களுக்கான வாழ்க்கையை
சிலர் வாழ்ந்துவிட்டு
ஏளனம் செய்யும் சமூகமே
பொதுவுடைமை என்பதின்
சொல்லுக்கு பொதுப்புத்தியில்
உரைப்பதென்ன எல்லாம்....?
எங்களுக்கு....
மயிலம் இளமுருகு
0 Response to "நாங்களும் மனிதர்களே கவிதை"
Post a Comment