சொல் இலக்கணம்

Trending

Breaking News
Loading...

சொல் இலக்கணம்

சொல் இலக்கணம்


எழுத்து இலக்கணத்திற்கு அடுத்து
, எழுத்துகளால் ஆன சொல்லின் இலக்கணம் கூறப்படுகிறது. சொல்லுக்கு இருவகையான விளக்கம் தரப்படுகிறது.

 

) சொல் எழுத்துகளால் உருவானதாக இருக்க வேண்டும்.

சொல், எழுத்து இலக்கணத்தில் சொல்லப்பட்ட உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் முதலிய எழுத்துகளால் உருவானதாக இருக்க வேண்டும். எழுத்துகள் அல்லாமல் வேறு ஓசைகளால் வருபவற்றைச் சொல் என்று கூறுவதில்லை.

 

o    தொண்டையைக் கனைத்தல்

o    முக்குதல்

o    சீழ்க்கை

இவற்றைச் சொல் என்று கூறுவதில்லை.

) சொல் பொருள் தருவதாக இருக்க வேண்டும்.

 

எழுத்துகளால் உருவானதாக இருந்தாலும் பொருள் தருவதாக இருந்தால் மட்டுமே அது சொல் எனப்படுகிறது. பொருள் தராதவை சொல் எனப்படுவது இல்லை.

 

ந் ம் ந் ய் வோ லி ஹி

 

இவை எழுத்துகளால் உருவாக்கப் பட்டிருந்தாலும் பொருள் தரவில்லை. எனவே இவற்றைச் சொல் என்று கூறுவதில்லை.

 

திணை

 

மக்கள், தேவர், நரகர் ஆகியவர்கள் உயர்திணை எனப்படுவர். இவர்களைத் தவிர்த்து உலகில் இருக்கும் உயிர் உள்ளவை, உயிர் அற்றவை யாவும் அஃறிணை எனப்படும்.

 

பால்

 

ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகிய மூன்றும் உயர்திணை ஆகும். ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டும் அஃறிணை எனப்படும்.

 

எண்

 

ஒன்று என்கிற எண்ணைக் குறிப்பது ஒருமை ஆகும். மற்ற அனைத்தும் பன்மை ஆகும். இவற்றைப் பின்வருமாறு காட்டலாம்.

 

முருகன் வந்தான்   உயர்திணை  ஆண்பால்    ஒருமை

நங்கை வந்தாள்     உயர்திணை  பெண்பால்   ஒருமை

மனிதர்கள் வந்தனர்  உயர்திணை  பலர்பால்    பன்மை

மாடு வந்தது                 அஃறிணை            ஒன்றன்பால்     ஒருமை

நாய்கள் வந்தன     அஃறிணை   பலவின்பால் பன்மை

 

இடம்

 

இடம் மூன்று வகைப்படும். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியனவாகும்.

 

1.        தன்மை

பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மை ஆகும்.

நான், நாம்

 

2.        முன்னிலை

பேசுபவர் தன் முன் உள்ளவரைக் குறிப்பது முன்னிலை ஆகும்.

நீ, நீர்

 

3.        படர்க்கை

 

பேசுபவர் தன்னையோ முன் உள்ளவரையோ குறிக்காமல் தொலைவில் உள்ளவரைக் குறிப்பது படர்க்கை ஆகும்.

அவன், அவள்

சொல் இலக்கணம் விரிந்தாக இருக்கிறது. இப்பகுதியில் முக்கியமானதாக இருப்பனவற்றைப் பின்வருமாறு அறிவோம்.

சொல்லின் வகைகள்

 

இலக்கண அமைப்பின்படி சொற்களை,

 

1. பெயர்ச்சொல்

2. வினைச்சொல்

3. இடைச்சொல்

4. உரிச்சொல்

 

என்று நான்கு வகையாகப் பிரிப்பார்கள்.

 

பெயர்ச்சொல்

 

ஒன்றன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுவது பெயர்ச்சொல் ஆகும். மரம், கல், மண் முதலியன பெயர்ச்சொற்கள் ஆகும். பெயர்ச் சொற்களுக்கு இரண்டு வகையாக இலக்கணம் சொல்லப்படுகிறது.

 

1. பெயர்ச் சொல் வேற்றுமையை ஏற்கும்.

2. பெயர்ச் சொல் காலம் காட்டாது.

 

பெயர்ச் சொற்களுக்குப் பின் வேற்றுமை உருபுகள் வந்து நிற்கும்.

 

நாய் என்பது ஒரு பெயர்ச் சொல். இதனுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து பின்வருமாறு அமையும்.

 

நாய் + ஐ   = நாயை   - (இரண்டாம் வேற்றுமை)

நாய் + ஒடு = நாயொடு - (மூன்றாம் வேற்றுமை)

நாய் + கு   = நாய்க்கு  - (நான்காம் வேற்றுமை)

 

நாய், கல், மரம், முதலிய பெயர்ச் சொற்கள் காலத்தைக் காட்டவில்லை என்பதை அறியலாம்.

 

பெயர்ச் சொற்களை ஆறு வகையாகப் பிரிக்கலாம்.

 

பொருள் பெயர்      -     மரம், மாடு, பாண்டியன், குழலி

இடப்பெயர்   -     ஊர், சென்னை, மேடு, மதுரை.

காலப்பெயர்  -     ஆண்டு, வெள்ளிக்கிழமை,  சித்திரை, காலை.

சினைப்பெயர் -     கை, கண், மூக்கு, வால், கிளை, வேர்.

குணப்பெயர்  -     நன்மை, வெண்மை, தண்மை, கருமை.

தொழில் பெயர்      -     நடத்தல், கொடுத்தல், செய்தல், கற்றல்.

 

வினைச் சொல்

 

ஒரு செயலைக் (வினையை) குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

 

கற்றான், நிற்கிறாள், வருவார் முதலியன வினைச் சொற்கள் ஆகும். வினைச் சொல்லின் இலக்கணம் பின்வருமாறு.

 

1. வினைச்சொல் காலம் காட்டும்

2. வினைச்சொல் வேற்றுமையை ஏற்காது.

 

வினைச் சொற்கள் காலத்தைக் காட்டும் தன்மை கொண்டவை. காலம் மூன்று வகைப்படும்.

 

இறந்தகாலம் - சென்றான், உண்டான், வந்தாள், படித்தார்.

நிகழ்காலம்   - செல்கிறான், உண்கிறான், வருகின்றாள், படிக்கிறார்.

எதிர்காலம்   - செல்வான், உண்பான், வருவாள், படிப்பார்.

மேலே காட்டிய வினைச் சொற்களுடன் வேற்றுமை உருபுகளைச் சேர்க்க முடியாது. எனவே, அவை வேற்றுமை உருபுகளை ஏற்காது என்பதை அறியலாம்.

 

வினைச் சொற்கள் எதிர் மறையாகவும் வரும்.

 

செல்லும்      X  செல்லாது

நிற்கும்            X    நிற்காது

ஓடும்         X       ஓடாது

நடக்கும்     X  நடக்காது

வினைச் சொற்களில் பல வகைகள் உள்ளன.

 

முற்று

 

முற்றுப் பெறுகின்ற வினை, முற்றுவினை எனப்படும்.

 

நான் நம்பியைப் பார்த்தேன்.

 

இதில் பார்த்தேன் என்னும் சொல்லில் பார்த்தல் என்னும் செயல் முற்றுப் பெற்றுள்ளது. எனவே இது முற்று வினை எனப்படும்.

பொருள் முற்று பெற்று வரும் வினைசொல் வினைமுற்று எனப்படும்.

இது எழுவாய்க்குப் பயனிலையாய் அமையும்.

Ø  முக்காலங்களில் ஒன்றை உணர்த்தி வரும்.

Ø  திணை, பால், எண், இடங்களைக் காட்டும்.

Ø  எ.கா.: வந்தான் நடந்தான் ஓடினான் வந்தான்

வினைமுற்றின் வகைகள்

Ø  வினைமுற்று இரண்டு வகைப்படும்

Ø  அவை, தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என்பனவாகும்.

தெரிநிலை வினைமுற்று

Ø  காலத்தை வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று தெரிநிலை

Ø  வினைமுற்று எனப்படும்.

Ø  இது, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்ற ஆறையும் தெரிவிக்கும்.

Ø  எ.கா.: உழுதான்

1.       செய்பவன் - உழவன்

2.       கருவி - கலப்பை

3.       நிலம் - வயல்

4.       செயல் - உழுதல்

5.       காலம் - இறந்தகாலம்

6.       செய்பொருள் - நெல்

குறிப்பு வினைமுற்று

Ø  பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற இறின்

Ø  அடிப்படையில் தோன்றும்.

Ø  கருத்தாவை மட்டும் தெரிவிக்கும்.

Ø  காலத்தைக் குறிப்பாகக் காட்டும்.

·         எ.கா.:

1.       பொன்னன்          பொன்னை உடையவன் பொருள்

2.       விழுப்புரத்தான்    விழுப்புரத்தில் வாழ்பவன் இடம்

3.       சித்திரையான்     சித்திரையில் பிறந்தவன் காலம்

4.       கண்ணன்           கண்களை உடையவன் சினை

5.       நல்லன்             நல்ல குணங்களை உடையவன் குணம்

6.       உழவன்            உழுதலைச் செய்பவன் தொழில்

எச்சம்

Ø  முற்று பெறாத வினை எச்சம் எனப்படும்

Ø  எ.கா.: வந்து, படித்து, சென்று, பாடி, ஓடி என்பன.

 

எச்சம்

 

முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினை, எச்ச வினை எனப்படும்

 

மணி வந்து போனான்.

மரத்திலிருந்து உதிர்ந்த பழம்.

 

இந்தத் தொடர்களில் உள்ள வந்து என்ற வினையும் உதிர்ந்த என்ற வினையும் முற்றுப் பெறாமல் உள்ளன. எனவே இவை எச்ச வினை எனப்படும். எச்ச வினை பெயரைக் கொண்டும் முடியும்; வினையைக் கொண்டும் முடியும். பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.

 

Ø  ஓடிய குதிரை.

Ø  பாடிய பாட்டு.

Ø  பாய்கின்ற வெள்ளம்.

Ø  பெய்யும் மழை.

 

இவை எல்லாம் பெயரைக் கொண்டு முடிவதால் பெயரெச்சம் எனப்படும்.

பெயரெச்ச வகைகள்

Ø  பெயரெச்சம் இரண்டு வகைப்படும்.

Ø  அவை, தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என்பனவாகும்.

தெரிநிலைப் பெயரெச்சம்

Ø  காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டும்.

Ø  செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்ற ஆறும் எஞ்சி நிற்கும்.

Ø  உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.

Ø  எ.கா.: உண்டான் இளங்கோ

1.       செய்பவன் - இளங்கோ

2.       கருவி - கலம்

3.       நிலம் - வீடு

4.       செயல் - உண்ணுதல்

5.       காலம் - இறந்தகாலம்

6.       செய்பொருள் - சோறு

 

1.       உண்ட இளங்கோ         உடன்பாடு

2.       உண்ணாத இளங்கோ      எதிர்மறை

குறிப்புப் பெயரெச்சம்

· காலத்தையோ செயலையோ வெளிப்படையாக உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம், குறிப்புப் பெயரெச்சம் எனப்படும். இது உடன்பாடு, எதிர்மறைப் பொருளிலும் வரும்.

· எ.கா.:   நல்ல மாணவன் உடன்பாடு

தீய மாணவன் எதிர்மறை

 

சென்று பேசினான்.

வந்து போனான்.

கற்றுத் தேர்ந்தான்.

 

இவை எல்லாம் வினையைக் கொண்டு முடிவதால் வினையெச்சம் எனப்படும்.

வினையெச்சம்

Ø  வினைச் சொற்களைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.(முற்று பெறாத வினைச்சொல் வேறொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது.)

Ø  எச்சசொல் + வினைச்சொல் = வினையெச்சம்

Ø  எ.கா.: படித்து வந்தான், பாடக் கேட்டான், ஓடிச் சென்றான், போய்ப் பார்த்தான்.

வினையெச்ச வகைகள்

Ø  வினையெச்சம் இரண்டு வகைப்படும்.

Ø  அவை, தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்பனவாகும்.

தெரிநிலை வினையெச்சம்

·  ஓர் எச்சச் சொல், காலத்தையும் செயலையும் வெளிப்படையாக உணர்த்தி, வினைமுற்றைக் கொண்டு முடிவது தெரிநிலை வினையெச்சமாகும்.

·    எ.கா.:   

படிக்கச் சென்றான்     

                     இறந்தகால வினையெச்சம்

படித்து வருகிறான்      

          நிகழ்கால வினையெச்சம்

 ஓடி வருவான்            

          எதிர்கால வினையெச்சம்

 

குறிப்பு வினையெச்சம்

· ஓர் எச்சச் சொல், காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று, வினைமுற்றைக் கொண்டு முடிவது குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

·   எ.கா.: மெல்லப் பேசினான், நோயின்றி வாழ்ந்தான்.

முற்றெச்சம்

·  ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப் பொருளில் வந்து, மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

·   எ.கா.: கண்ணன் படித்தான் தேறினான்.

இடைச்சொல்

 

தனித்து இயங்காமல் பெயருடன் அல்லது வினையுடன் சேர்ந்து வரும் சொற்கள் இடைச்சொற்கள் எனப்படும். இடைச்சொற்கள் தனித்துப் பொருள் தருவதில்லை.

 

இடைச் சொற்கள் எட்டு வகைப்படும்.

 

1. வேற்றுமை உருபுகள்

 

முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உண்டு. அவை,

 

இரண்டாம் வேற்றுமை- 

மூன்றாம் வேற்றுமை -ஆல்

நான்காம் வேற்றுமை - கு

ஐந்தாம் வேற்றுமை - இன்

ஆறாம் வேற்றுமை  - அது

ஏழாம் வேற்றுமை   - கண்

 

என அமைந்துள்ளன.

 

2. காலம் காட்டும் இடைநிலைகளும் விகுதிகளும்.

 

வினைச் சொற்களில் வரும் காலம் காட்டுகின்ற இடைநிலைகளும் விகுதிகளும் இடைச் சொற்கள் ஆகும். கிறு, கின்று, ஆநின்று முதலியவை காலம் காட்டும் இடைநிலைகள். அன், ஆன் முதலியவை விகுதிகள்.

 

3. உவம உருபுகள்

 

உவமைத் தொடர்களில் வரும் உவம உருபுகள்.

 

தாமரை போல் மலர்ந்த முகம்.

 

இதில் போல் என்பது உவம உருபு

 

4. சாரியைகள்

 

சந்தி இலக்கணத்தில் வரும் சாரியைகள்.

 

ஆல்+அம்+காடு = ஆலங்காடு

 

என்பதில் அம் சாரியை ஆகும்.

 

5. தத்தம் பொருளை உணர்த்தி வருபவை

 

, , உம் முதலிய இடைச் சொற்கள் தத்தம் பொருளை உணர்த்தி வருபவை.

 

அவனே கொண்டான்       -  

அவனோ கொண்டான்         -  

அவனும் வந்தான்        -    உம்

 

6. இசைநிறை

 

, ஒடு முதலிய இடைச் சொற்கள் இசைநிறையாக வரும்.

 

ஏஏ இவள் ஒருத்தி பேடியோ -    

இவளொடு                      -     ஒடு

7. அசைநிலை

 

மன், மற்று, கொல் ஆகிய இடைச் சொற்கள் அசைநிலையாக வருபவை.

 

ஒப்பர்மன்        -    மன்

மற்றுஎன்          -   மற்று

ஆய்மயில்கொல்    -     கொல்

 

8. குறிப்பால் பொருள் உணர்த்துபவை

 

பொள்ளென, கதும்என, சரேல்என இவற்றில் வரும் என என்பது குறிப்புப் பொருள் உணர்த்தும் இடைச்சொல் ஆகும். மேலே காட்டியவாறு இடைச்சொல் எட்டு வகைகளில் அமைந்துள்ளது.

 

உரிச்சொல்

 

உரிச்சொல் இலக்கணம் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

 

Ø  பல வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தி வரும். (பண்பு - குணம்)

Ø  பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் சார்ந்து வரும்.

Ø  ஒரு சொல் ஒரு பொருளை உணர்த்துவதாகவும், ஒருசொல் பல பொருளை உணர்த்துவதாகவும் இருக்கும்.

 

4. செய்யுளுக்கு உரியதாய் வரும்.

மேலே காட்டியபடி உரிச்சொல்,

 

1. ஒரு குணம் தழுவிய உரிச்சொல்

2. பல குணம் தழுவிய உரிச்சொல்

 

என இரண்டு வகைப்படும்.

 

1. ஒரு குணம் தழுவிய உரிச்சொல்

 

ஒரு குணம் தழுவிய உரிச்சொல் என்பது, ஒரு பொருள்தரும் பல சொற்களைக் குறிக்கும்.

 

எ.கா:

சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய சொற்கள் மிகுதி என்ற ஒரே பொருள் தரும்.

 

எனவே இவற்றை ஒரு குணம் தழுவிய உரிச்சொல் எனலாம்.

 

2. பல குணம் தழுவிய உரிச்சொல்

 

பல பொருள்களைத் தரும் ஒரு சொல்லைப் பல குணம் தழுவிய உரிச்சொல் என்று கூறுவர்.

 

எ.கா:

கடி என்ற சொல் காப்பு, கூர்மை, மிகுதி, விரைவு, அச்சம், சிறப்பு முதலிய பல பொருள்களைத் தரும்.

 

எனவே இதைப் பல குணம் தழுவிய உரிச்சொல் எனலாம்.

 

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

 

எ.கா: வீடு, கண், போ

 

செய்யுளில் வரும் சொற்கள்

 

இலக்கியங்களில் வரும் சொற்கள் நான்கு வகைப்படும்.

 

1. இயற்சொல் 2. திரிசொல் 3. திசைச்சொல் 4. வடசொல்

 

இயற்சொல்

 

செந்தமிழ் நாட்டில் வழங்கி, எல்லோருக்கும் இயல்பாகப் பொருள் விளங்கும்படி உள்ள சொல் இயற்சொல் எனப்படும்.

 

கல், மண், மரம், நிலம், அவன், நான், நீ முதலியன இயற்சொற்கள் ஆகும்.

 

திரிசொல்

 

ஒரு பொருள் தரும் பல சொல்லாகவும், பல பொருள் தரும் ஒரு சொல்லாகவும் வந்து, எளிதாகப் பொருள் உணர முடியாதபடி உள்ள சொற்கள் திரிசொற்கள் ஆகும்.

 

ஒரு பொருள் தரும் பல சொல்: வெற்பு, விலங்கல், பொருப்பு, பொறை, நவிரம், குன்று முதலிய சொற்கள் மலை என்ற ஒரே பொருள் தருகின்றன.

 

பல பொருள் தரும் ஒரு சொல்: வாரணம் என்ற சொல் கோழி, சங்கு, யானை, பன்றி ஆகிய பொருள்களைத் தரும்.

 

இவ்வாறு எளிதில் பொருள் உணர இயலாமல் வரும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

 

திசைச்சொல்

 

செந்தமிழ் நிலத்தைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளில் பேசப்படும் மொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படுகின்றன.

 

சொல்

 

பொருள்

 

நாடு

தள்ளை

=

தாய்

=

குட்ட நாடு

அச்சன்

=

தந்தை

=

குட நாடு

கேணி

=

கிணறு

=

அருவாநாடு

எலுவன்

=

தோழன்

=

சீதநாடு

 

வடசொல்

சமஸ்கிருத மொழியை வடமொழி என்று குறிப்பிடுகிறோம். அந்த வடமொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்களை வடசொற்கள் என்று கூறுவர்.

கந்தம், ஞானம், வீரம், சுகம், புராணம் முதலியன வடசொற்கள் ஆகும்.

 

 

 

0 Response to "சொல் இலக்கணம் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel