விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ், கடலாகக் காட்சிதருகிறது. தமிழ் கடலோடும் ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.
ஆழிக்கு இணை
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் -நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு
-தனிப்பாடல்
சொல்லும் பொருளும்
துய்ப்பது – கற்பது, தருதல்
மேவலால் – பொருந்துதல், பெறுதல்
பாடலின் பொருள்
தமிழ் : தமிழ் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடை
ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது;
சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
கடல் : கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது; வெண்சங்கு, சலஞ்சலம்,
பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி
இருக்கிறது; தன் அலையால் தடுத்து நிறுத்திச் சங்கினைக் காக்கிறது.
|
பாடல் அடிகள் |
தமிழுக்கு |
கடலுக்கு |
|
முத்தமிழ் |
இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் |
முத்தினைஅமிழ்ந்து எடுத்தல் |
|
முச்சங்கம் |
முதல், இடை,கடை ஆகிய முச்சங்கம் |
மூன்று வகையான சங்குகள் தருதல் |
|
மெத்த வணிகலன் |
ஐம்பெரும் காப்பியங்கள் |
மிகுதியான வணிகக் கப்பல்கள் |
|
சங்கத்தவர் காக்க |
சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள்
பாதுகாத்தமை |
நீரலையைத் தடுத்து நிறுத்தி சங்கினைக்
காத்தல் |
நூல்வெளி
புலவர்கள் பலரின் பாடல்களின் தொகுப்பான
தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல்
எடுத்தாளப்பட்டுள்ளது.
சந்தக்கவிமணி என வழங்கப்படும் தமிழழகனாரின்
இயற்பெயர் சண்முகசுந்தரம். இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும்
பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கியங்கள் படைத்துள்ளார்.

0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - ஆழிக்கு இணை - சந்தக்கவிமணி தமிழழகனார்"
Post a Comment