10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - கற்கண்டு - தொகாநிலைத் தொடர்

Trending

Breaking News
Loading...

10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - கற்கண்டு - தொகாநிலைத் தொடர்

10  ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - கற்கண்டு - தொகாநிலைத் தொடர்

  


தொகாநிலைத்தொடர்

ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ மறையாது, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர்  எனப்படும்.

எ.கா காற்று வீசியது

             குயில் கூவியது

முதல் தொடரில் காற்றுஎன்னும் எழுவாயும் வீசியதுஎன்னும்  பயனிலையும்  தொடர்ந்து நின்று வேறுசொல் வேண்டாது பொருளை உணர்த்துகின்றன.

அதேபோன்று இரண்டாவது தொடரிலும் எழுவாயும் பயனிலையும் தொடர்ந்து நின்று  குயில் கூவியது என்னும் பொருளைத் தருகின்றன.

தொகாநிலைத்தொடரின் வகைகள்

 

1.எழுவாய்த் தொடர்

எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த் தொடர் ஆகும்.

இனியன் கவிஞர் -  பெயர்

காவிரி பாய்ந்ததுவினை

பேருந்து வருமா? – வினா

மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.


2 .விளித்தொடர்          

விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.

நண்பா எழுது!.             நண்பா என்னும் விளிப்பெயர் எழுது என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.


3.வினைமுற்றுத் தொடர்               

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத் தொடர் ஆகும்.

   பாடினாள் கண்ணகி

பாடினாள் என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.


4 .பெயரெச்சத் தொடர்                   

பெயரெச்சத்துடன் ஒரு பெயர் தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.

கேட்ட பாடல்.              கேட்ட என்னும் எச்சவினை பாடல என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.


5.வினையெச்சத் தொடர்               

முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைத் தொடர்வது வினையெச்சத்தொடர் ஆகும்.

பாடி மகிழ்ந்தனர்.       பாடி என்னும் எச்சவினை மகிழ்ந்தனர் என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.


6.வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.

கட்டுரையைப் படித்தாள்  - (ஐ) இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

கண்டதால் மகிழ்ந்தேன்  – (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

அறிஞருக்குப் பொன்னாடை – (கு) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

மேற்கண்ட தொடர்களில்  , ஆல், கு ஆகிய வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகின்றன.


7.இடைச்சொல் தொடர்                

இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.

மற்றொன்று.                   மற்று + ஒன்று மற்று என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.


8.உரிச்சொல் தொடர்                       

உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.

சாலச் சிறந்தது.              சால என்பது உரிச்சொல். அதனைத்தொடந்து சிறந்தது என்ற சொல்நின்று பொருளைத் தருகிறது.


9.அடுக்குத் தொடர்   

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.

 

வருக! வருக! வருக!. ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.          

 

தெரியுமா?

ஒன்றிற்கு மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக்கொண்டு முடியும் கூட்டுநிலைப் பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம். வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.

.கா.

கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி

 


0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - கற்கண்டு - தொகாநிலைத் தொடர் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel