10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கற்கண்டு - வினா, விடை வகைகள், பொருள்கோள்

Trending

Breaking News
Loading...

10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கற்கண்டு - வினா, விடை வகைகள், பொருள்கோள்

10  ஆம்  வகுப்பு - தமிழ் - இயல் 5 - கற்கண்டு -  வினா,  விடை வகைகள், பொருள்கோள்

 



வினா,
  விடை வகைகள், பொருள்கோள்

 

மொழியின் வளர்ச்சி என்பது வினவுவதிலும் விடையளிப்பதிலும்கூட இருக்கிறது. பல்வேறு சூழல்களில் கேள்விகள் கேட்கிறோம்; விடைகள் கூறுகிறோம். அவற்றைப் பற்றி நன்னூலார் விளக்குகிறார்.

 

வினாவகை

 

அறிவினா, அறியா வினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என்று வினா ஆறு வகைப்படும்.

அறிவினா

தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது.


மாணவரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல்.

அறியாவினா

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது.

ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று மாணவர் கேட்டல்.

ஐய வினா

ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது.

இச்செயலைச் செய்தது மங்கையா மணிமேகலையா?’ என வினவுதல். 

கொளல் வினா

தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது.

ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா?’ என்று நூலகரிடம் வினவுதல்.

கொடை வினா

பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது.

‘என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா?’ என்று கொடுப்பதற்காக வினவுதல்.

ஏவல் வினா

ஒரு செயலைச் செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது.

“வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.

 

அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை

ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் – நன்னூல்,385

விடைவகை

 நன்னூலார் விடைகளை எட்டு வகைகளாக விளக்குகிறார்.

அவை சுட்டு விடை, மறை விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை ஆகியன.

 முதல் மூன்று வகையும் நேரடி விடைகளாக இருப்பதால் வெளிப்படை விடைகள் எனவும் அடுத்த ஐந்து விடைகளும் குறிப்பு விடைகளாக இருப்பதால் குறிப்பு விடைகள் எனவும் கொள்ளலாம்.

சுட்டு விடை

சுட்டிக் கூறும் விடை

கடைத்தெரு எங்குள்ளது?’ என்று வினாவிற்கு, ‘லப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல்.

மறை விடை

மறுத்துக் கூறும் விடை

மணி கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்கு போகமாட்டேன் என மறுத்துக் கூறல்.

நேர் விடை

உடன்பட்டுக் கூறும் விடை

மணி கடைக்குப் போவாயா?’ என்ற கேள்விக்குப் போவேன் என்று உடன்பட்டுக் கூறல்.

ஏவல் விடை

மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை.

இது செய்வாயா?” என்று  வினவியபோது, “நீயே செய்”என்று ஏவிக் கூறுவது

வினா எதிர் வினாதல் விடை

வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது.

‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு  ‘வராமல் இருப்பேனா?என்று கூறுவது.

உற்றது உரைத்தல் விடை

வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல்.

நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது என்று உற்றதை உரைப்பது.

உறுவது கூறல் விடை

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்.

நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும் என்று உற்றதை உரைப்பது.

இனமொழி விடை

வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்.

“உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது

சுட்டு மறைநேர்  ஏவல் வினாதல்

உற்ற(து) உரைத்தல் உறுவது கூறல்

இனமொழி எனும்எண் இறையுள் இறுதி

நிலவிய ஐந்தும்அப் பொருண்மையின் நேர்ப” (நன்னூல் – 386)

 

பொருள்கோள்

செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப்பொருள்கோள்என்று பெயர். பொருள்கோள் எட்டு வகைப்படும். அவை ஆற்றுநீர்ப் பொருள்கோள், மொழிமாற்றுப் பொருள்கோள், நிரல்நிறைப் பொருள்கோள், விற்பூட்டுப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைமறிமாற்றுப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள், அடிமறிமாற்றுப் பொருள்கோள்  ஆகியன. இவற்றுள் ற்றுநீர்ப் பொருள்கோள், நிரல் நிறைப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஆகியவற்றைக் காணலாம்.

 

1.       1. ஆற்று நீர்ப் பொருள்கோள்

(.டு)

சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்

 மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்த நூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே

 (சீவக சிந்தாமணி)

நெற்பயிர் கருவுற்ற பச்சைப் பாம்பின் வடிவம்போல் கருக்கொண்டு, பின்பு கதிர்விட்டு, கீழ்மக்கள் செல்வம் சேர்ந்தவுடன் பணிவின்றித் தலை நிமிர்ந்து நிற்பதுபோல் குத்திட்டு நின்று, முடிவில் கதிர் முற்றியவுடன் கற்றவர்கள் வணங்குதல் போல் வளைந்து காய்த்தன.

நெல்என்னும் எழுவாய் அதன் தொழில்களான இருந்து, ஈன்று, நிறுவி, இறைஞ்சி என்னும் வினையெச்சங்களைப் பெற்றுக்காய்த்தவேஎன்னும் பயனிலையைக் கொண்டு  முடிந்தது.

பாடலின் தொடக்கம்முதல் முடிவுவரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இதுஆற்றுநீர்ப் பொருள்கோள்ஆகும்.

மற்றைய நோக்கா தடிதொறும் வான்பொருள்

அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப் புனலே.’ (நன்னூல்-412)

 

2.         2.நிரல்நிறைப் பொருள்கோள்

 

ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவதுநிரல்நிறைப் பொருள்கோள்ஆகும்.

இது (1) முறை நிரல்நிறைப் பொருள்கோள், (2) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள் என இருவகைப்படும்.

(1)       முறை நிரல்நிறைப் பொருள்கோள்

 

செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச்சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல்முறை நிரல்நிறைப் பொருள்கோள்ஆகும்.

(.டு) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

           பண்பும் பயனும் அது.

 

க்குறளில் பண்பு பயன் என்ற இரு சொற்களை வரிசைப்படுத்தி அவற்றிற்குரிய விழைவுகளாக அன்பு, அறன் என்று வரிசைப்படுத்தி உள்ளார். அதை இல்வாழ்க்கையின் பண்பு, அன்பு என்றும் அதன் பயன் அறன் என்று பொருள்கொள்ள வேண்டும். எனவே, அன்புக்குப் பண்பும் அறத்துக்குப் பயனும் பயனிலைகளாக நிரல்நிறையாக நிறுத்திப் பொருள்கொள்வதால் இப்பாடல்முறை நிரல்நிறைப் பொருள்கோள்எனப்படும்.

(2)       எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்

 

செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல்எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்ஆகும்.

(.டு) ‘விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.’

இக்குறளில் ஓர் அடியில் விலங்கு, மக்கள் என்று எழுவாய்களை வரிசைப்படுத்திவிட்டு, அடுத்த அடியில் பயனிலைகளாகக் கற்றார், கல்லாதார் (ஏனையவர்) என வரிசைப்படுத்தியுள்ளார். அதைக் கற்றார் மக்கள் என்றும், கல்லாத ஏனையவர் விலங்குகள் என்றும் எதிர் எதிராகக் கொண்டு பொருள்கொள்ள வேண்டும். எனவே, இக்குறள்எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்ஆகும்.

பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்

வேறுநிரல் நிறீஇ முறையினும் எதிரினும்

நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே                       (நன்னூல் – 414)

 

3.        3.கொண்டுகூட்டுப் பொருள்கோள்

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும்.

.கா.

ஆலத்து மேல குவளை குளத்தன

வாலின் நெடிய குரங்கு                     -    மயிலைநாதர் உரை

மேற்கண்ட பாடலில் ஆலத்து மேல் குவளை என்றும் குளத்தில் வாலின் நெடிய குரங்கு எனப் பொருள் கொண்டால் பொருத்தமற்றதாகிவிடும். இதில் ஆலத்து மேல குரங்கு, குளத்தன குவளை – என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள்கோள் அமைந்திருப்பதால் இது கொண்டுகூட்டுப்பொருள்கோள் எனப்படும்.

யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை

ஏற்புழி இசைப்பது கொண்டு கூட்டே (நன்னூல் – 418)

0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - கற்கண்டு - வினா, விடை வகைகள், பொருள்கோள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel