தமிழ் அறிவோம்! 102. பிஞ்சும் இருக்கிறது ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 102. பிஞ்சும் இருக்கிறது ஆ.தி.பகலன்

 தமிழ் அறிவோம்!   102. பிஞ்சும் இருக்கிறது  ஆ.தி.பகலன்



 
பிஞ்சும் இருக்கிறது 

அரசரைப் புகழ்ந்து பாடி பொன்னாடை ஒன்றைப் பரிசாகப் பெற்றார் புலவர் ஒருவர்.

அந்தப் பொன்னாடையைத் தடவிப் பார்த்ததும் அது கிழிந்து இருப்பதைக் காண்கிறார் . அதனால் வருத்தமுற்ற அப்புலவர்,  இந்தக் கிழிந்த பொன்னாடையை எப்படி கொண்டு செல்வது என்று கவலையில் ஆழ்ந்தார். 

புலவரின் முக வாட்டத்தை உணர்ந்து  கொண்ட அரசர்,         "பொன்னாடை பிடித்திருக்கிறதா புலவரே?  எனக் கேட்டார். 

"அரசே ! தாங்கள் வழங்கிய பொன்னாடை மிகவும் அருமையாக இருக்கிறது .

அதில் மரம் இருக்கிறது.

கிளை இருக்கிறது.

இலை இருக்கிறது.

காய் இருக்கிறது.

கனி இருக்கிறது.

இதோ , பிஞ்சும் இருக்கிறது" எனக் கூறினார் .

 அதாவது,  பொன்னாடை பிய்ந்து போய் இருக்கிறது என்பதை நயமாக அரசருக்குச் சுட்டிக் காட்டினார் அப்புலவர் .

பொன்னாடை கிழிந்து இருப்பதை சிலேடை மூலம் உணர்த்திய அப்புலவரின் கவி நயத்தைக் கண்ட அரசர், புதிய பொன்னாடையுடன் பொன்முடிப்பையும் பரிசாகத் தந்து அப்புலவரைச்  சிறப்பித்தார்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

 


0 Response to " தமிழ் அறிவோம்! 102. பிஞ்சும் இருக்கிறது ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel