தமிழ் அறிவோம்! - 12 பன்னிரண்டு பனிரெண்டு பன்னிரெண்டு எது சரி? - ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 12 பன்னிரண்டு பனிரெண்டு பன்னிரெண்டு எது சரி? - ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  - 12 பன்னிரண்டு பனிரெண்டு பன்னிரெண்டு  எது சரி? - ஆ.தி.பகலன்

 


பன்னிரண்டு

பனிரெண்டு

பன்னிரெண்டு

எது சரி?

 

"இரண்டு முன்வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்

கரந்திட ஒற்று 'ன'வ்வாகும் என்ப "

(நன்னூல் : எழுத்ததிகாரம் : உயிரீற்றுப் புணரியல் நூற்பா - 198)

 

வருமொழியில் இரண்டு என்னும் எண்ணுப்பெயர் வந்து புணரும்போது, நிலைமொழியாக  நின்ற பத்து என்னும் எண்ணுப் பெயரின் இறுதியில் உள்ள  'து' என்னும் உயிர்மெய் கெடும். நடுவில் நின்ற தகரமெய் (த்) னகர மெய்யாகத் (ன்) திரியும் .

பத்து + இரண்டு

பத் + இரண்டு

பன் +  இரண்டு

'தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் '  (நன்னூல் - 205 )

என்ற விதிப்படி ' நிலைமொழி ஈற்று  ஒற்று (ன்)  இரட்டிக்கும்.

 

பன்ன் + இரண்டு.

 

'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ' (நன்னூல் - 204 )

 என்ற விதிப்படி நிலைமொழி ஈறும் (ன்) வருமொழி முதலும் (இ) புணர்ந்து ( ன்+இ=னி)  'பன்னிரண்டு ' என வரும்.

 

எனவே,  'பன்னிரண்டு ' என்பதே சரி.

 

பனிரெண்டு

'ரெண்டு' என்பது வழூஉச்சொல்.

'பனிரெண்டு ' பெய்யும் பனியில் இரண்டு என்று பொருள்.

 

பன்னிரெண்டு

பன்றியில் (பன்னி) இரண்டு என்று பொருள்.

 

இனி "பன்னிரண்டு " என்றே எழுதுவோம்.

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! - 12 பன்னிரண்டு பனிரெண்டு பன்னிரெண்டு எது சரி? - ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel