காவிரி
/ காவேரி
எது
சரி?
காவேரி
:
காவேரன்
என்ற அரசனின் மகள் தான் காவேரி. அவளே பின் நதியாகவிட்டாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
அந்த அடிப்படையில் உருவான பெயர்தான் 'காவேரி ' .
'இகரம்
எகரம் ஆகும் இசைத்தன்மையால்' என்ற விதிப்படி 'வி' என்பது ' வே' ஆகி காவேரி ' என்று
ஆகிவிட்டது.
காவிரி
:
கா+விரி
= காவிரி
கா
- காடு, சோலை.
(பூ + கா = பூங்கா - பூக்கள் நிறைந்த சோலை. )
தான்
செல்லும் இடம் எல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் 'காவிரி '
எனப்பெயர் பெற்றது. அதாவது நீர் வளத்தை அள்ளித் தந்து மண்ணில் சோலைகளின் பரப்பை
அதிகப்படுத்துவதால் 'காவிரி ' என்று அழைக்கப்படுகிறது.
"வான்
பொய்ப்பினும் தான் பொய்யா,
மலைத்
தலைய கடற்காவிரி " என்று காவிரியைப் போற்றுகிறது
பட்டினப்பாலை.
காரணம்
கருதி வழங்கப்படும் பெயரான 'காவிரி ' என்ற பெயரையே இனி பயன்படுத்துவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 13 - காவிரி / காவேரி எது சரி? ஆ.தி.பகலன் "
Post a Comment