தமிழ் அறிவோம்! 128 காலைப்பிடி! காரியம் நடக்கும் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 128 காலைப்பிடி! காரியம் நடக்கும் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 128 காலைப்பிடி! காரியம் நடக்கும் ஆ.தி.பகலன்

  


"காலைப்பிடி! காரியம் நடக்கும்! "
 

தனக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும் என்பதற்காக பணம் படைத்தவனையும், பலம் படைத்தவனையும் நாடிச்சென்று அவன் காலைப் பிடித்து நாம் நீனைத்த காரியாத்தைச் சாதித்துக் கொள்ள  வேண்டும் என்பது இப்பழமொழிக்கான பொருள் இல்லை. 

"கால் " என்பதற்கு காற்று என்றும் பொருள் உண்டு.

உடலில் இருந்து காற்றை எடுத்துச் சென்று விடுவதால் எமனை ' காலன் ' என்று அழைக்கிறோம். 

வீட்டின் உள்ளே சென்று வர,  அமைக்கப்படும் சன்னலுக்கு " காலதர் " என்று பெயர். 

( கால் + அதர் = காலதர் .

கால் - காற்று ; அதர் - வழி) . 

மூக்கின் வழியே செல்லும் காற்றைப் பிடித்து வைத்தால் நீ நினைத்த காரியம் நடக்கும் என்பதே  இதன் உண்மைப் பொருளாகும். 

இதை திருமூலரின் பாடல் வழி அறிவோம். 

" வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்

பளிங்கு ஒத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்

தெளியக் குருவின் திருவருள் பெற்றால்

வளியினும் வேட்டு வெளியனும் ஆமே " ( திருமந்திரம் - 569) 

இடப்பக்க மூக்கின் வழியாக மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வசப்படுத்தி , உள்ளேயே அடக்கினால் உடல் பளிங்கு போல் ஒளி வீசித் திகழும்.  முதுமை வந்தாலும் உடல் இளமை மாறாதிருக்கும். குருவின் திருவருள்  துணை இருக்குமானால் , இந்தப் பயிற்சி உடையவரின் உடல் காற்றை விட மென்மைத் தன்மை அடையும். போற்றத்தக்க மேன்மை உடையவராக இருப்பார் . அவர் நினைத்த காரியம் எல்லாம் நடக்கும். அதாவது,  அவர் எங்கும் செல்லும் ஆற்றல் உடையவராக இருப்பார். 

காலைப்பிடி - மூச்சுப் பயிற்சியினால் காற்றை உனக்குள் அடக்கி வை . 

காரியம் நடக்கும் - மரணத்தை வென்று இம்மண்ணில் நீ வாழ நினைக்கும் காலம்வரை வாழலாம். அதுவும் இளமையோடு வாழலாம் .

நீ நினைத்த காரியம் எல்லாம் நடக்கும்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .


0 Response to "தமிழ் அறிவோம்! 128 காலைப்பிடி! காரியம் நடக்கும் ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel