"எண்வகைச் செருக்கு "
" செருக்கு " என்னும் சொல்லுக்கு பெருமிதம்,
ஆணவம் என்று இரு பொருள்கள் உண்டு.
வள்ளுவரும் தன் குறட்பாவில் இரு
பொருள்களிலும் ' செருக்கு ' என்னும் சொல்லைப்
பயன்படுத்தி இருக்கிறார்.
படைச்செருக்கு " என்னும் அதிகாரத்தில் 'படையின்
பெருமிதம் ' என்ற பொருளில் ' செருக்கு ' என்னும் சொல்லைப் பயன்படுத்தி
இருக்கிறார். 'பெருமிதம் ' என்னும்
பொருளில் ' செருக்கு ' என்னும் சொல்லைப் பல குறட்பாக்களில் பயன்படுத்தி இருக்கிறார்
வள்ளுவர்.
அதேபோல்,
'செருக்கு'' என்னும் சொல்லை '
ஆணவம் ' என்ற பொருளிலும் ' பல
குறட்பாக்களில் பயன்படுத்தி இருக்கிறார் வள்ளுவர்.
" தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. " ( குறள் - 201)
தீவினை செய்வதற்குக் காரணமாகிய ஆணவத்தை ( செருக்கு) உடையவர்கள் தீய செயல்களைச் செய்ய பயப்பட
மாட்டார்கள். உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தீவினை செய்ய அச்சப்படுவார்கள்.
தன்னுடைய செயற்கரிய செயலை எண்ணி பெருமிதம் கொள்ளலாம்.
அது தவறில்லை. அந்தப் பெருமித உணர்வு அளவு கடந்து போனால், அது ஆணவமாக உருமாறும்.
இப்படி ஆணவமாக உருமாறும் செருக்கு,
மொத்தம் எட்டு வகைப்படும்.
" அறிவுடைமை, மீக்கூற்றம் , ஆன குலனே,
உறுவலி, நல்தவம், ஓங்கிய செல்வம் ,
பொறி,வனப்பின் எம்போல்வார் இல்என்னும் எட்டும்
இறுதிக்கண் ஏமாப்பு இல. ( அறநெறிச்சாரம் - 65)
1.அறிவுடைமை
2. புகழ் ( மீக்கூற்றம் )
3. உயர்குடிப்பிறப்பு ( ஆன குலன்)
4. மிக்க வலிமை ( உறுவலி)
5. நல்ல தவ வலிமை ( நல்தவம்)
6. உயர்ந்த செல்வம் ( ஓங்கிய செல்வம்)
7. நல்ல ஊழ் ( பொறி)
8. உடல் அழகில் ( வனப்பு) எம்மைப் போன்றவர்கள் உலகத்தில்
வேறு எவரும் இல்லை என்று கூறி மகிழ்தல்.
இந்த எட்டுவகைச் செருக்கும் இறுதியில் மேலான இன்பத்தைக்
கொடுக்காது. அழிவையே கொடுக்கும்.
இவண்
ஆ.தி.பகலன்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம் .
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 135. எண்வகைச் செருக்கு ஆ.தி.பகலன்"
Post a Comment