தமிழ் அறிவோம்! 139. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 139. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  139. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்    ஆ.தி.பகலன்

 


"ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் "
 

ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய வலிமையாக இருப்பது மன வலிமை மட்டுமே.  அதுபோல, மன்னனுக்கு மிகப்பெரிய வலிமையாக இருப்பது  மக்கள் அவன் மீது கொண்ட அன்பு மட்டுமே. நாட்டு மக்களிடம் நன்மதிப்பைப் பெற்ற மன்னனை உலகமே திரண்டு வந்து ஓர் அணியில் நின்று எதிர்த்தாலும்  அவனை வெல்ல முடியாது . மக்களின் அன்புக்கு முன்னால் ஆயுதங்கள் என்ன செய்யும்? 

" மறுமனத்த அல்லாத மாநலத்த வேந்தன்

உறுமனத்தான் ஆகி ஒழுகின் - தெறுமனத்தார்

பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?

'ஆயிரம் காக்கைக்கோர் கல் ' . ( பழமொழி நானூறு - 165) 

மனத்தில் குற்றம் குறைகள் இல்லாதவனாகவும் , நற்குணங்கள் எல்லாம் பெற்றவனாகவும் இருக்கின்ற மன்னன்தான் ,  தன் நாட்டு மக்களிடம் மிகவும் அன்புடையவனாக நடந்து கொள்வான்.  மக்கள் மீது   அளவு கடந்த அன்பு காட்டும்  மன்னனை ,  மக்களும் தங்கள் உயிரின் உயிராகப் போற்றுவர் . அப்படி நாட்டு  மக்களின் அன்பைப் பெற்ற மன்னனைக் கொல்வதற்கு வஞ்சினம் கூறிக் கொண்டு பகைவர்கள் படையெடுத்து வந்தாலும் , அவர்களால் என்ன செய்ய முடியம்? ஒன்றும் செய்ய முடியாது. 

ஆயிரம் காக்கைகளை ஓட்டுவதற்கு ஒரு சிறு கல்லே போதுமானது. ஒரு கல்லைக் கண்டதும் ஆயிரம் காக்கைகளும் அலறி அடித்துக் கொண்டு ஓடிவிடும் .

 அதுபோல, ஆயிரம் மன்னர்கள் படையெடுத்து வந்தாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மன்னனிடம் தோற்று ஓடுவர். 

ஒரு மன்னனுக்கு உண்மையான   வலிமை எது தெரியுமா?

நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்று இருப்பதுதான். 

ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள்  வலிமையை பெருக்கிக் கொள்ள, மக்களின் நன்மதிப்பைப் பெற்றாலே போதும் . வேறு ஒன்றும் செய்யத் தேவையில்லை.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம். 

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 139. ஆயிரம் காக்கைக்கு ஒரு கல் ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel