தமிழ் அறிவோம்! - 2 பால் பொங்குச்சா? - ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 2 பால் பொங்குச்சா? - ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! - 2 பால் பொங்குச்சா? - ஆ.தி.பகலன்



பொங்கல் முடிந்ததும் "உங்கள் வீட்டில் பால் பொங்குச்சா"  என்று கேட்பது ஏன்?

பொங்கல் முடிந்ததும் "காணும்பொங்கல் " அன்று சான்றோர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் ஆகியோரை நேரில் கண்டு வாழ்த்து பெறுதல் தமிழர் மரபு.

நல்லோரைக் காணுதல், கண்டு வாழ்த்து பெறுதல் என்பதே "காணும் பொங்கல் " என்று ஆயிற்று.

ஏழை, எளியோர் எல்லாம் பொருள் உடையவர்களிடம் சென்று "பொங்கல் அன்பளிப்பு " பெறுவதும் வழக்கம்.

இப்படி வாழ்த்து பெற செல்பவர்களும், பொங்கல் அன்பளிப்பு பெற செல்பவர்களும் தாங்கள் நாடிச் சென்றவர்களிடம் "உங்கள் வீட்டில் பால் பொங்குச்சா? " என்று கேட்பார்கள்.

இதற்கு  பொருள் என்னவென்றால்

"நீங்கள் பொங்கல் கொண்டாடினீர்களா? " என்று மறைமுகமாக கேட்கிறார்கள். 

தமிழர் மரபுப்படி வீட்டில் யாரேனும் இறந்துவிட்டால் அந்த துக்கத்தை கடைப்பிடிக்க ஓர் ஆண்டு எந்த விழாக்களையும் கொண்டாட மாட்டார்கள் . அவர்களிடம் வாழ்த்து பெறுவதும் " அன்பளிப்பு கேட்பதும் நாகரிகம் ஆகாது .

இதைத்தான் நாகரிகமாக " உங்கள் வீட்டில் பால் பொங்குச்சா " என்று  கேட்பார்கள் . பால் பொங்கியது என்று  அவர்கள் சொன்னால் , அவ்ர்கள் பொங்கல் கொண்டாடி இருக்கிறார்கள் என்று பொருள் . அவர்களிடம் வாழ்த்தோ , அன்பளிப்போ கேட்பார்கள் . ஒருவேளை அவர்கள் " பால் பொங்கவில்லை " என்று சொன்னால் அவர்கள் பொங்கல் கொண்டாடவில்லை என்பதை புரிந்து கொண்டு நாகரிகமாக அவர்களை கடந்து செல்வார்கள் .

பொங்கல் கொண்டாடிவிட்டு மகிழ்ச்சியோடும் , மனநிறைவோடும் இருப்பவர்களிடம் தான் வாழ்த்தோ ,அன்பளிபபோ பெறவேண்டும் . எதையும்  மனநிறைவோடு தந்தால்தான் அதை பெறுபவர்களுக்கு மேலும்மேலும் செல்வத்தைச் சேர்க்கும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். (பால் பொங்கியது என்றால் பாலோடு சேர்ந்து பொங்கல் பொங்கியது என்று பொருள்)

காணும்பொங்கல் அன்று சான்றோர்களையும் , பெரியோர்களையும் நேரில் சந்தித்து அவர்களுடைய  காலில்  நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வாழ்த்து பெற வேண்டும் . அப்போது அவர்கள் மலர்தூவி மனநிறைவோடு வாழ்த்துவார்கள் . வாழ்த்து சொல்லி வெறும் கையோடு  அனுப்பக்கூடாது எனக் கருதி கையில் காசு கொடுத்து அனுப்புவார்கள் . இப்படித்தான் " பொங்கல் காசு " கொடுக்கும் வழக்கம் உருவானது .

ஆனால் இன்றோ " பால் பொங்குச்சா " என்று கேட்டாலே  கண்டிப்பாக காசு  கொடுக்க வேண்டும் என்ற தவறான பழக்கம் உருவாகிவிட்டது.

சரி, இப்போ சொல்லுங்க. உங்க வீட்டில் "பால் பொங்குச்சா? "

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

0 Response to "தமிழ் அறிவோம்! - 2 பால் பொங்குச்சா? - ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel