சம்மந்தி / சம்பந்தி
எது சரி?
"சம்பந்த்" என்ற வடமொழி சொல்லுக்கு " தொடர்பு
" வைக்க தகுதி உடையவர் என்று பொருள்.
"சம்" என்றால் " நல்ல " என்று பொருள்.
"பந்தி" என்றால் " தொடர்பு
" என்று பொருள். " நல்ல தொடர்புடையவர்" என்று பொருள் கொள்ள வேண்டும்.
பெண் கொடுத்தவரையும்,
பெண் எடுத்தவரையும் "சம்பந்தி" என்பார்கள். "சம்பந்தம்
" பேசி முடித்தல் என்றால் " நல்ல உறவை /தொடர்பை உருவாக்குதல் என்று பொருள்.
"சம்பந்தி " என்பதை தமிழில் "உறவாடி " என்றும்
" கொண்டான் கொடுத்தான் " என்றும்
அழைப்பர்.
சம்மந்தி
"சம்" என்றால் "நல்ல " என்று பொருள்.
"மந்தி " என்றால் "குரங்கு " என்று பொருள்
"சம்மந்தி " என்றால் "நல்ல குரங்கு " என்று
பொருள் .
எனவே "சம்மந்தி" என்று அழைக்காமல் " சம்பந்தி
" என்று அழைப்போம் .
இல்லையேல் தமிழில்
"கொண்டான் கொடுத்தான் " என்று அழைப்போம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
( அலைப்பேசி - 9965414583)
0 Response to "தமிழ் அறிவோம்! - 3 சம்மந்தி / சம்பந்தி எது சரி? ஆ.தி.பகலன்"
Post a Comment