தமிழ் அறிவோம்! ­ 35 தான்தோன்றி (சுயம்பு) ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! ­ 35 தான்தோன்றி (சுயம்பு) ஆ.தி.பகலன்

 தமிழ் அறிவோம்! ­ 35  தான்தோன்றி (சுயம்பு)  ஆ.தி.பகலன்

 


தான்தோன்றி (சுயம்பு) 

ஒரு கோவிலில் இருக்கும் தெய்வத்தின் திருவுருவமானது  தானாக (சுயம்பாக)  தோன்றுவதை ( வெளிப்படுவதை)க் குறிப்பதற்காக 'தான்தோன்றி ' என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது. 

தமிழ்நாட்டில் உள்ள  எண்ணற்ற தெய்வத்தின் திருவுருவங்கள் தான்தோன்றியாக கிடைத்தவையே.

மயிலாடுதுறை மாவட்டம்   ஆக்கூர் கோவிலில் உள்ள இறைவனின் திருப்பெயர் தான்தோன்றியப்பர் . அக்கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைப் போற்றி திருஞான சம்பந்தர் பாடிய பாடல் (தேவாரம்) ஒன்றைக் காண்போம்.

"கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்

பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்

அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி

தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே "

(தேவாரம்)

தேன் விளங்கும் குளிர்ந்த கொன்றை மாலையுடைய ஈசன், கூற்றுவன் வதைப்படுமாறு சினந்தவன்;  மேலான ஒளியைத் தருகின்ற திருவெண்ணீறு தரித்தவன். அப்பெருமான் விளங்குகின்ற கோவில் , வேதத்தின் ஆறு அங்கங்களும் அரிய மறைகள் நான்கும், ஐந்து வகையான வேள்விகளும் ஆற்றி ஒழுகும் சீலர்கள் உள்ள ஆக்கூரில் திகழும் தான்தோன்றி மாடம் ஆகும்.

"தான்தோன்றித்தனம் " 

தானாக வெளிப்படும் இறைவனின் திருவுருவத்தைக் குறித்த 'தான்தோன்றி ' என்னும் சொல்லானது, தற்போது தறிகெட்டு வாழும் மனிதர்களைக் குறிக்கும் சொல்லாக மாறியிருக்கிறது . யாரையும் மதிக்காமல், மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்காமல் 'தன்' மனதுக்கு எது எப்படித் 'தோன்று' கிறதோ அதையே பிடிவாதமாகச் செய்யும் குணத்தையே 'தான்தோன்றித்தனம் '  என்று கூறுவர்.

'பெரியாரைத் துணைக்கோடல் ' என்னும் வள்ளுவர் வாக்கை மறந்து ' தான்தோன்றித்தனமாக ' வாழ்பவர் விரைவில் கெட்டொழிவர்.

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to " தமிழ் அறிவோம்! ­ 35 தான்தோன்றி (சுயம்பு) ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel