"ஆவன செய்யுமாறு "
நாம் ஏதேனும் உதவி வேண்டி வேண்டுதல் விண்ணப்பம் எழுதுவோம் . விண்ணப்பத்தின் இறுதியில் 'ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் ' என்று முடிப்போம் .
அது என்ன ஆவன செய்யுமாறு?
சிலர் அதன் பொருள் அறியாமல் ஆவண செய்யுமாறு என்றும் எழுதுகின்றனர் . இதில் உள்ள பிழைகளைக் கண்டறிவோம் .
ஆவணம் ( DOCUMENT)
நம் எண்ணங்களை எழுதியோ , வரைந்தோ காட்சிப்படுத்தும். நிலையான (கோப்பு) பதிவையே ஆவணம் என்பர் . காலம் காலமாக ஆவணங்கள் நூல் வடிவில் (தாளில் ) வெளிவந்தன . இப்போது கணினிக் கோப்புகளாக உருவாக்குகிறார்கள். இதனை எண்ணிம ஆவணம் ( ELECTRONIC DOCUMENT) அல்லது மின்னியல் ஆவணம் என்று அழைப்பர். எனவே விண்ணப்பத்தில் ஆவண செய்யுமாறு என்று எழுதுதல் கூடாது.
"ஆவன செய்யுமாறு "
இதற்கு ' ஆக வேண்டியன ' என்று பொருளாகும்.
எங்கள் ஊருக்கு குடிநீர் வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக்
கொள்கிறோம்.
எங்கள் ஊருக்கு குடிநீர் வழங்க ஆக வேண்டியன (ஆவன) செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இனியாவது, பொருள் அறிந்து "ஆவன செய்யுமாறு "
என்று பிழையில்லாமல் எழுதுவோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 36 "ஆவன செய்யுமாறு " ஆ.தி.பகலன் "
Post a Comment