ஆசிரியர் - மாணவர்
ஆசு + இரியர் = ஆசிரியர் .
ஆசு - குற்றம்
இரியர் - நீக்குபவர்.
மாணவர்களிடையே உள்ள 'அறியாமை' யாகிய குற்றத்தை
நீக்குபவரே "ஆசிரியர் "
மாணவர்களிடையே உள்ள அறியாமையைக் களைந்து அவனை அறிவுள்ளவனாய் மாற்றுபவரே
" ஆசிரியர் "
மாண் + அவர் = மாணவர்
மாண் என்ற
சொல்லானது மாண்பு, மாட்சிமை, பெருமை, சிறப்பு
என்ற பொருளில் வருகிறது.
பெருமிதம் எனும் மெய்ப்பாடு தோன்றும் களன்களைத்
தொல்காப்பியம் வரையறை செய்துள்ள முறையைக் காண்போம்.
" கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே "
(தொல். மெய் - 9 )
கல்வி - கற்பதால் பெருமிதம் தோன்றும்.
தறுகண் - வீரத்தால் பெரும் வெற்றி பெருமிதத்தைக்
கொடுக்கும்.
புகழ்மை - நற்செயல் செய்து அதனால் கிடைக்கும் புகழ்
நமக்கு பெருமிதத்தைக் கொடுக்கும்.
கொடை - வறியோர்க்கு அளிக்கும் கொடையால் நமக்கு பெருமிதம் உண்டாகும். இந்த நான்கு வகையால் பெருமிதம் தோன்றும்.
இதில் முதலில் கூறப்பட்டது கல்வி. கல்வி கற்கும்
எல்லோர்க்கும் பெருமிதம் (பெருமை)
உண்டாகும்.
அந்த வகையில் 'மாண் ' என்ற சொல்லானது 'பெருமிதம்' (பெருமை)
என்ற பொருளில் வருவதை அறியலாம்.
"மாணவன்
" என்றால் பெருமைக்கு உரியவன் என்று
பொருளாகும்.
கல்வியைக் கசடறக் கற்பதனாலேயே அந்த பெருமை அவனைச்
சேரும். கல்வி கற்பவன் பெருமையோடு விளங்குவான் என்பதை எடுத்துக்காட்டவே அவனை
"மாணவன்" என்று அழைக்கிறோம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! - 39 ஆசிரியர் - மாணவர் ஆசு + இரியர் = ஆசிரியர் ஆ.தி.பகலன்"
Post a Comment