ஓர் / ஒரு பயன்படுத்த வேண்டிய இடங்கள்.
ஒரு சொற்றொடரின் முதல் சொல்லை ' நிலைமொழி ' என்பர்.
ஒரு சொற்றொடரின் இரண்டாவது சொல் (அதாவது நிலைமொழியை
அடுத்து வரும் சொல்)லை ' வருமொழி '
என்பர்.
ஒரு, ஓர் ஆகிய இரண்டு சொற்களுமே என்றும்
நிலைமொழியாகத்தான் பயன்படுத்துகிறோம் .
ஓர் :
வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்து எனில் 'ஓர்'
எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
ஓர் இலை
ஓர் அணில்.
ஒரு :
வருமொழியின் முதல் எழுத்து உயிர்மெய் எழுத்து எனில்
'ஒரு' எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
ஒரு சொல் கேளீர்
ஒரு புளியமரத்தின் கதை
'ஓர் ' என்பது உயிரெழுத்து முன்னும் வரும் சில இடங்களில்
மெய்யெழுத்து முன்னும் வரும்.
"நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள் "
(சிலப்பதிகாரம்)
"ஓர் யான் மன்ற துஞ்சா தேனே "
(குறுந்தொகை - 06)
ஒரு, ஓர் இரண்டுமே அஃறிணைக்கு மட்டுமே வரும்.
உயர்திணைக்கு வராது.
ஓர் ஆசிரியர்
ஓர் எழுத்தாளர்
என்று எழுதக்கூடாது.
ஆசிரியர் ஒருவர்
எழுத்தாளர் ஒருவர்
என்றுதான் எழுத வேண்டும்.
நாம் காலம் காலமாக சொல்லிவரும் புகழ்பெற்ற சொற்றொடர் இது
" ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார் "
இது இலக்கணப் பிழையான சொற்றொடர்.
பிழையற்ற சொற்றொடர் இதுதான்.
ஓர் ஊரில் ராஜா ஒருவர் இருந்தார்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை
திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்.
(
அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 44 - ஓர் / ஒரு பயன்படுத்த வேண்டிய இடங்கள் ஆ.தி.பகலன்"
Post a Comment