தமிழ் அறிவோம்! – 46 - பட்டினம் / பட்டணம் வேறுபாடு! ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! – 46 - பட்டினம் / பட்டணம் வேறுபாடு! ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! – 46 - பட்டினம் / பட்டணம் வேறுபாடு! ஆ.தி.பகலன்

 


பட்டினம் / பட்டணம் 
வேறுபாடு! 

பட்டினம் : 

பட்டினம் என்பது கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள நகரங்களைக் குறிக்கும்.

இது நெய்தல் நிலத்தில் உள்ள நகரத்தைக் குறிக்கும் சொல்லாகவே நெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாகப்பட்டினம்

காயல்பட்டினம்

காவிரிப்பூம்பட்டினம். 

பட்டணம்= பட்டு + அணம்.

பட்டு என்ற சொல்லுக்கு  நகரம் என்ற பொருளும் உண்டு.

செங்கல்பட்டு

சேத்துப்பட்டு. 

அணம்  என்ற சொல்லின் வேர்ச்சொல் 'அண்'  என்பதாகும். ''அண்' என்பது அண்மை, அடுத்திருத்தல் ஆகிய பொருளில் வருகிறது. 

'பட்டணம் ' என்றால் பட்டுகளுக்கு அண்மையாக இருப்பது என்று பொருளாகும். அடுத்தடுத்து உள்ள நகரம், நெருக்கமாக உள்ள நகரம் என்றும் பொருள் கொள்ளலாம்.

அதாவது, "பட்டணம்" என்ற சொல்லுக்கு "பெருநகரம் " என்று பொருளாகும்.

பெருநகரங்களைக் குறிக்கவே பட்டணம் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

பட்டிக்காடா

பட்டணமா

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! – 46 - பட்டினம் / பட்டணம் வேறுபாடு! ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel