தமிழ் அறிவோம்! 61. " அ, ஆ , இ , " இவற்றின் சிறப்புகள். ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 61. " அ, ஆ , இ , " இவற்றின் சிறப்புகள். ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  61.  " அ, ஆ , இ , " இவற்றின் சிறப்புகள். ஆ.தி.பகலன்

 


" அ, ஆ , இ , "
 இவற்றின் சிறப்புகள்.

 

நமக்கு வாழ்க்கை  கொடுத்தவர்கள் என்று நால்வரை சொல்லலாம்.

 மாதா, பிதா, குரு, தெய்வம். 

இவர்களை அகர வரிசைப்படி இப்படியும் எழுதலாம். 

அ - அம்மா, அப்பா

ஆ - ஆசிரியர்

இ - இறைவன் / இயற்கை 

(இறை நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனையும், இயற்கையை நம்புபவர்கள் இயற்கையையும் எழுதிக் கொள்ளலாம்.) 

தமிழின் முதல் எழுத்தான 'அ' வில் நம்மை ஈன்றெடுத்த அம்மா, அப்பாவையும்

இரண்டாவது எழுத்தான ' ஆ' வில் நமக்கு கல்வி தந்த ஆசிரியரையும், மூன்றாவது எழுத்தான ' இ ' யில் நம்மை காக்கின்ற இறைவன் / இயற்கை யையும் எழுதலாம். 

அதுபோலவே,

நாம் இன்பமாக வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளான உடை,உண்டி (உணவு) , உறையுள் (இருப்பிடம்)  ஆகியவற்றையும்   வரிசைப்படுத்தலாம்.

உண்ண உணவும், உடுத்த உடையும், இருக்க இருப்பிடமும் தான் மக்களின் அடிப்படைத் தேவைகளாகும். 

அ - அன்னம் (உணவு)

ஆ - ஆடை

இ - இருப்பிடம். 

நமக்கு வாழ்வு தந்தவர்களையும், நம் நல்வாழ்க்கைக்கான  அடிப்படைத்  தேவைகளையும்

"அ,ஆ,இ" என்ற  மூன்று உயிரெழுத்துகளில்  அடங்கி , இவையே நமக்கு உயிர் போன்றவை என்பதையும் , தமிழ் எழுத்துகளில் முதல் மூன்றாக (அ,ஆ,இ) விளங்குவதால் உலகில் உள்ளவற்றில் இவையே முதன்மையானது என்பதையும் இது உணர்த்துகிறது. 

இதுபோன்ற சிறப்புகளைத் தமிழைத்தவிர, உலக மொழிகளில் வேறு எவற்றிலும் காண முடியாது.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

0 Response to "தமிழ் அறிவோம்! 61. " அ, ஆ , இ , " இவற்றின் சிறப்புகள். ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel