தமிழ் அறிவோம்! 7 - கோவில் / கோயில் எது சரி? ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 7 - கோவில் / கோயில் எது சரி? ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 7 - கோவில் / கோயில்  எது சரி? ஆ.தி.பகலன்

 


கோவில் / கோயில்

எது சரி?

 

"இஈ ஐவழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும் "

(நன்னூல் - 162)

 

என்ற விதிப்படி நிலைமொழி (முதலில் வரும் சொல்)  ஈற்றிலும், வருமொழி (இரண்டாவதாக வரும் சொல் ) முதலிலுல் உயிர் எழுத்து வந்தால்  "உடம்படுமெய் (ய்,வ்) எழுத்து தோன்றும்.

 அந்த வகையில்

நிலைமொழி ஈற்றில் இ,ஈ,ஐ வந்தால் யகர (ய்) உடம்படு மெய்யும், ஏனைய உயிர் எழுத்துகள்  (அ,ஆ,உ,ஊ,எ,ஏ,ஒ,ஓ,ஔ ) வந்தால் வகர (வ்) உடம்படுமெய்யும் வரும். நிலைமொழி  எழுத்துகளில் மட்டுமே இந்த எழுத்துகளைக்  காண வேண்டும். வருமொழியில் எந்த உயிர் எழுத்து வந்தாலும் பரவாயில்லை.

 

திரு(ர்+உ) + அண்ணாமலை

திரு+ வ்+ அண்ணாமலை

திருவண்ணாமலை.

பனை (ன்+ஐ) +ஓலை

பனை+ய்+ஓலை

பனையோலை.

 

கோ - அரசன், இறைவன்.

இல் - இல்லம் ' இருப்பிடம்.

"கோவில் " என்றால் அரசன் இருப்பிடம் (அரண்மனை), இறைவன் இருப்பிடம் என்று பொருளாகும்.

 

நிலைமொழி இறுதி எழுத்து (க்+ஓ) "ஓ" வும் வருமொழி முதல் எழுத்தான  'இ' (இல்) யும் சேரும் போது "வ்" என்ற உடம்படுமெய் தோன்றி (கோ+வ்+இல்  ) கோவில் என்று புணரும் .

 

ஆக 'கோவில் 'என்பதே சரி .

 

கோயில் என்பது வழூஉச்சொல் (மக்கள் தவறுதலாக பயன்படுத்துவது ) ஆகும்.

இனி "கோவில் " என்றே எழுதுவோம் .

 

இன்று செய்தித்தாளைப் பாருங்கள்

"அயோத்தி  இராமர் கோவில் திறப்பு விழா" என்றே இருக்கும் .

 

தமிழ்நாட்டில் உள்ள  "கோவில்" என்ற ஒட்டுப் பெயர்கள் கொண்ட  நகரங்களைப் பாருங்கள்.

நாகர்கோவில்

கோவில்பட்டி

காளையார் கோவில்

திருக்கோவிலூர் .

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

0 Response to "தமிழ் அறிவோம்! 7 - கோவில் / கோயில் எது சரி? ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel