தமிழ் அறிவோம்! 99. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 99. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்!  99. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆ.தி.பகலன்

 


"கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு " 
 

இன்றைய காலகட்டத்தில் ஒரு நாட்டை ஆள்பவனே சிறந்தவன், உயர்ந்தவன் என்று எண்ணிக்கொண்டு அதிகார போதையில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள். ஆள்பவனை விடவும் சிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை விளக்கும் அழகான பாடல் ஒன்றை இங்குக் காண்போம். 

" மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு. ( மூதுரை - 26) 

ஒரு நாட்டின் மன்னனைவிட குற்றமறக்  கற்றறிந்தவனே சிறந்தவனாகக் கருதப்படுகின்றான்.

ஏனெனில்,

மன்னனுக்கு அவன் ஆட்சி செய்கின்ற நாட்டில் மட்டுமே மதிப்பு உண்டு. மாலை மரியாதை எல்லாம் உண்டு. அம்மன்னன் மற்ற நாடுகளுக்கு சென்றால் மதிப்பு என்பது துளியளவு கூட கிடைக்காது .

ஆனால், கற்றறிந்தவர்கள் செல்லுகின்ற நாட்டில் எல்லாம்  அவர்களுக்கு  மதிப்பும் உண்டு. புகழும் உண்டு. எந்த ஒரு நாட்டிலும் கற்றவர்களுக்கென்று தனி மரியாதை உண்டு.

ஆதலால்,  மன்னனை விட மாசறக் கற்றவர்களே மதிப்பு மிக்கவர்கள். சிறப்பு மிக்கவர்கள்" . 

இந்த உலகத்தை  ஆள்பவர்களை விட உயர்ந்த இடத்தில்  நிற்க வேண்டும் என்றால் , நாம் கற்றவர்களாக இருக்கவேண்டும். அறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

அதற்கு ஒரே வழி நாம் நூல்களை வாசிக்கும் பழக்கம் உடைவர்களாக மாற  வேண்டும்.

இந்ந உலகமே நம் உள்ளங்கையில் இருக்க வேண்டும் என்றால் , நம் கையில் எப்போதும் புத்தகம் இருக்க வேண்டும்.  நல்ல மனிதன் என்பவன்,  புத்தியோடும் இருக்க வேண்டும். புத்தகத்தோடும் இருக்க வேண்டும்.

 "நூலகம் சென்று

நூல்களை

வாசிக்கப் பழகு!

நீ வாழும் வாழ்க்கைக்கு

அதுதான் உண்மையான அழகு!

"உலக புத்தக நாள் "

( ஏப்ரல் - 23)


இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 

0 Response to "தமிழ் அறிவோம்! 99. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel