"சான்றோரைப் போற்றுதும் "
எந்தவொரு நல்ல செயலுக்கும் சான்றாக இருப்பவர்களையே
" சான்றோர் " என்பர்.
"சான்றோர் " என்றாலே "சான்றாக இருப்பவர்
"என்பது பொருளாகும். அப்படிப்பட்ட
சான்றோர்களைப் போற்றுவது நல்லோர்களின் நற்கடமை ஆகும்.
ஆனால்,
இக்காலத்தில் சான்றோரை மட்டுமல்ல,. பெற்றோரை, பெரியோரை, கற்றோரை, கல்வி
கற்பிப்போரை என யாரையும் மதிப்பதில்லை என்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு தன்
வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கிறது இன்றைய இளம் தலைமுறை.
"அடக்கமே வளர்ச்சியின் தொடக்கம் " என்பார்கள்.
வயதில் பெரியவர்களிடம் அடக்கத்தோடு நடந்து
கொள்ளாமல் அடாவடியாக நடந்து கொள்ளும் போக்குதான் தற்போது நாட்டில் நடந்தேறி
வருகிறது. இளம் தலைமுறையை உரிய முறையில்
வழிநடத்தாமல் விட்டால், வருங்காலத்தில்
நற்பண்புகள் இல்லா சமூகத்தை நாம் காணும் நிலையே நமக்கு ஏற்படும். இதையெல்லாம்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து அறிவுறுத்தி இருக்கிறது நாலடியார்.
" இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
விடுப்ப
ஒழிதலோடு இன்ன - குடிப்பிறந்தார்
குன்றா ஒழுக்கமாகக் கொண்டார் கயவரோடு
ஒன்றா உணரற்பாற் றன்று. ( நாலடியார் - 143)
"பெரியோர் வரக் கண்டால் தன் இருக்கையில் இருந்து
எழுதலும் , சற்று எதிர்சென்று மகிழ்வுடன் வரவேற்றலும், வணங்கி நிற்றலும், அவரை வழியனுப்பும்போது அவர்பின் செல்லுதலும்,
அவர் விடைதரத் திரும்பி வருதலும் ஆகிய நற்குணங்களை, உயர்குடிப் பிறந்தார் தமது அழியாத
ஒழுக்கங்களாக் கொண்டிருப்பர். ஆனால், கீழ்மக்களிடம் இவற்றில் ஒன்றேனும் பொருந்தி
இருக்கும் என எண்ணுதல் சரியன்று " என்கிறது நாலடியார்.
நாலடியார் எடுத்துரைக்கும் நற்கருத்துகளுக்கு எடுத்துக்காட்டாக, எதிர்காலத் தலைமுறை விளங்குவதற்கு
நாம் அனைவரும் வழியமைப்போம்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to " தமிழ் அறிவோம்! 145. சான்றோரைப் போற்றுதும் ஆ.தி.பகலன்"
Post a Comment