"வாக்காளப் பெருமக்களே "
வாக்கு + ஆளர் - வாக்காளர்.
தேர்தலில் வாக்கு செலுத்துபவரையே வாக்காளர் என்பர்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவர்,
தனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் , வாக்களிக்காத வாக்காளப்
பெருமக்களுக்கும் நன்றி செலுத்த
விரும்பினார். அதற்காக அழகு தமிழில் ஒரு கவிதை எழுதி அதை சுவரொட்டி மூலமாக
ஊரெங்கும் ஒட்டினார். அந்தக் கவிதையைப் பாருங்கள்.
" வாக்களித்து வாக்களித்த வாக்காளப்
பெருமக்களுக்கும்,
வாக்களித்து வாக்களிக்கா வாக்காளப் பெருமக்களுக்கும்,
வாக்களிக்கா வாக்களித்த
வாக்காளப் பெருமக்களுக்கும்,
வாக்களிக்கா வாக்களிக்கா வாக்காளப் பெருமக்களுக்கும்,
நன்றி! நன்றி!!
நன்றி!!! "
தேர்தலில் எனக்கு வாக்களிப்பதாக வாக்களித்தது உறுதி
அளித்தது) , போலவே எனக்கு வாக்களித்த (ஓட்டு போட்ட) வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி.
தேர்தலில் எனக்கு வாக்களிப்பதாக வாக்களித்துவிட்டு, கடைசியில் எனக்கு வாக்களிக்காமல் போன வாக்காளப்
பெருமக்களுக்கு நன்றி.
3 . வாக்களிக்கா வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும்,
எனக்கு வாக்களிப்பதாக எந்தவித வாக்குறுதியும்
அளிக்காமலேயே , எனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி!
4 . வாக்களிக்கா வாக்களிக்கா வாக்காளப்
பெருமக்களுக்கும்,
எனக்கு வாக்களிப்பதாக எந்தவித வாக்குறுதியும்
அளிக்கவில்லை. அதுபோலவே, எனக்கு வாக்கும்
அளிக்கவில்லை. அப்படிப்பட்ட வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றி!
தமிழாலும், தமிழ்நாட்டு மக்களாலும் அரசியலில் அரியணை கண்டவர்கள் பலர். அரியணை கண்டதும் தமிழையும், தமிழ்நாட்டு
மக்களையும் நினைத்துப் பார்த்தவர்கள் இங்கு யாரும் இலர்.
தேர்தலில் வெற்றி பெற்றதும் அழகு தமிழால், காலத்திற்கும் நினைவில் நிற்கும்
கவிதையால், அனைத்து வாக்காளப்
பெருமக்களுக்கும் நன்றி சொன்ன நல்ல
உள்ளங்களும் நாட்டில் இருந்திருக்கிறார்கள்.
இவண்
ஆ.தி.பகலன்,
நெறியாளர்,
சதுரை திருக்குறள் பேரவை,
சதுரங்கப்பட்டினம்,
( அலைப்பேசி - 9965414583) .
0 Response to "தமிழ் அறிவோம்! 146. வாக்காளப் பெருமக்களே ஆ.தி.பகலன்"
Post a Comment